கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' (Thug Life) திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கலை சந்தித்துள்ளது. கன்னட மொழியானது, தமிழிலிருந்து உருவானது என்று கமல்ஹாசன், நடைப்பெற்று முடிந்த தக் ஃலைப் திரைப்பட ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் தெரிவித்த கருத்து சர்ச்சையானது.
கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கர்நாடகாவிலுள்ள திரையரங்குகளில் படத்தைத் திரையிட மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC - Karnataka Film Chamber of Commerce) அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில் தான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மத்திய தெற்கு மாவட்டம் சார்பில் ஊர் முழுவதும் “அன்பு மன்னிப்பு கேட்காது .. உலகறிந்த உண்மையை சொன்னார், இருவருக்கு உள்ள உறவை சொன்னார், அன்பை சொன்னதற்கு மன்னிப்பா? சத்தியம் தலை வணங்காது” என வாசகங்கள் குறிப்பிடப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அனைவரின் கவனத்ஹ்டையும் ஈர்த்துள்ளது.
உறுதியாக நிற்கும் கமல்:
கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வலுத்த போது, இதுத்தொடர்பாக பல முறையும் கமலும் விளக்கமளித்து விட்டார். பட ப்ரோமோஷன் தொடர்பான நிகழ்வொன்றில், ”அன்பு மன்னிப்பு கேட்காது” என வெளிப்படையாக கூறினார் கமல்ஹாசன். மேலும், இந்த பிரச்னை குறித்து அறிஞர்கள் தான் கருத்து சொல்ல வேண்டுமே தவிர, அரசியலாக்க முயல்வது வருத்தத்திற்குரியது எனவும் கமல் தெரிவித்தார்.
நடைப்பெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக கமல் அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல். அதற்கு பிந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மன்னிப்பு கேட்பது தொடர்பாக பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, “நான் தவறாக பேசவில்லை என்ற போது, மன்னிப்பு கேட்க முடியாது” என கமல் திட்டவட்டமாக கூறினார்.
நீதிமன்றத்தை நாடிய கமல்:
ஒருபுறம் இதுவரை கமல் மன்னிப்பு கேட்காத நிலையில், பட வெளியீட்டிற்கு இன்னும் ஒரிரு நாட்களே உள்ள நிலையில் கர்நாடகவில் திரைப்படம் வெளியாகுவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தச் சூழலில் தான், 'தக் லைஃப்' படத்தை வெளியிட நீதிமன்றப் பாதுகாப்பைக் கோரி கமல்ஹாசன் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். கமல் நீதிமன்றத்திற்கு சென்றாலும், KFCC தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
KFCC தலைவர் எம். நரசிம்மலு இது குறித்துப் பேசுகையில், "கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்கும் வரை எந்தத் திரையரங்கிலும் இந்தப் படம் திரையிடப்படாது. இது மொழி மற்றும் இரு மாநிலப் பிரச்சனையாக மாறிவிட்டதாகவும், கன்னட ஆதரவு அமைப்புகள் மற்றும் அரசாங்கமே மன்னிப்புக் கோருமாறு வலியுறுத்தி வரும் நிலையில் கமல் அதற்கு உடன்படாமல் இருப்பது எதற்காக?” என குறிப்பிட்டுள்ளார். தக் ஃலைப் திரைப்படத்தின் விநியோகஸ்தர்கள் கமல்ஹாசனுடன் இந்த விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும், தங்களது சட்டக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு அடுத்தகட்ட முடிவை KFCC எடுக்கும் என்றும் எம்.நரசிம்மலு தெரிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதல்வரின் கருத்து:
"நாம் (தமிழ்நாடு - கர்நாடகா] அண்டை மாநிலத்தவர்கள். நாம் இருவரும் ஒன்றாக வேலை செய்கிறோம், வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்குள்ள தண்ணீர் தமிழகத்துக்குச் செல்கிறது, அங்குள்ள மக்கள் இங்கு வந்து வசிக்கிறார்கள், நாம் எதிரிகளில்லை; நண்பர்கள்.மொழி விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்குத் தெரியாது. அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என கமல்ஹாசனின் கன்னட மொழி பற்றிய கருத்து சர்ச்சையானது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் மணிரத்னம்-கமல் இணையும் தக் ஃலைப் திரைப்படத்தில் சிம்பு,த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்ப்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கர்நாடகாவிலுள்ள திரையரங்குகளில் படத்தைத் திரையிட மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC - Karnataka Film Chamber of Commerce) அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில் தான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மத்திய தெற்கு மாவட்டம் சார்பில் ஊர் முழுவதும் “அன்பு மன்னிப்பு கேட்காது .. உலகறிந்த உண்மையை சொன்னார், இருவருக்கு உள்ள உறவை சொன்னார், அன்பை சொன்னதற்கு மன்னிப்பா? சத்தியம் தலை வணங்காது” என வாசகங்கள் குறிப்பிடப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அனைவரின் கவனத்ஹ்டையும் ஈர்த்துள்ளது.
உறுதியாக நிற்கும் கமல்:
கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வலுத்த போது, இதுத்தொடர்பாக பல முறையும் கமலும் விளக்கமளித்து விட்டார். பட ப்ரோமோஷன் தொடர்பான நிகழ்வொன்றில், ”அன்பு மன்னிப்பு கேட்காது” என வெளிப்படையாக கூறினார் கமல்ஹாசன். மேலும், இந்த பிரச்னை குறித்து அறிஞர்கள் தான் கருத்து சொல்ல வேண்டுமே தவிர, அரசியலாக்க முயல்வது வருத்தத்திற்குரியது எனவும் கமல் தெரிவித்தார்.
நடைப்பெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக கமல் அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல். அதற்கு பிந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மன்னிப்பு கேட்பது தொடர்பாக பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, “நான் தவறாக பேசவில்லை என்ற போது, மன்னிப்பு கேட்க முடியாது” என கமல் திட்டவட்டமாக கூறினார்.
நீதிமன்றத்தை நாடிய கமல்:
ஒருபுறம் இதுவரை கமல் மன்னிப்பு கேட்காத நிலையில், பட வெளியீட்டிற்கு இன்னும் ஒரிரு நாட்களே உள்ள நிலையில் கர்நாடகவில் திரைப்படம் வெளியாகுவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தச் சூழலில் தான், 'தக் லைஃப்' படத்தை வெளியிட நீதிமன்றப் பாதுகாப்பைக் கோரி கமல்ஹாசன் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். கமல் நீதிமன்றத்திற்கு சென்றாலும், KFCC தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
KFCC தலைவர் எம். நரசிம்மலு இது குறித்துப் பேசுகையில், "கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்கும் வரை எந்தத் திரையரங்கிலும் இந்தப் படம் திரையிடப்படாது. இது மொழி மற்றும் இரு மாநிலப் பிரச்சனையாக மாறிவிட்டதாகவும், கன்னட ஆதரவு அமைப்புகள் மற்றும் அரசாங்கமே மன்னிப்புக் கோருமாறு வலியுறுத்தி வரும் நிலையில் கமல் அதற்கு உடன்படாமல் இருப்பது எதற்காக?” என குறிப்பிட்டுள்ளார். தக் ஃலைப் திரைப்படத்தின் விநியோகஸ்தர்கள் கமல்ஹாசனுடன் இந்த விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும், தங்களது சட்டக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு அடுத்தகட்ட முடிவை KFCC எடுக்கும் என்றும் எம்.நரசிம்மலு தெரிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதல்வரின் கருத்து:
"நாம் (தமிழ்நாடு - கர்நாடகா] அண்டை மாநிலத்தவர்கள். நாம் இருவரும் ஒன்றாக வேலை செய்கிறோம், வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்குள்ள தண்ணீர் தமிழகத்துக்குச் செல்கிறது, அங்குள்ள மக்கள் இங்கு வந்து வசிக்கிறார்கள், நாம் எதிரிகளில்லை; நண்பர்கள்.மொழி விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்குத் தெரியாது. அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என கமல்ஹாசனின் கன்னட மொழி பற்றிய கருத்து சர்ச்சையானது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் மணிரத்னம்-கமல் இணையும் தக் ஃலைப் திரைப்படத்தில் சிம்பு,த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்ப்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.