மெட்ரோ தண்டவாள டிராக்கில் நேற்று மாலை போரூர் அடுத்த பகுதியில் DLF மற்றும் L&T இடையே மெட்ரோ பில்லர்களுக்கு இடையே பொருத்தப்பட்டிருந்த ரயில்வே டிராக் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து நந்தம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்( 42) என்பது தெரியவந்தது. இவர் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் தங்கி தனியார் பில்லிங் நிறுவனத்தில் சேல்ஸ் மேலாளராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து நந்தம்பாக்கம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பாக ஆலந்தூர் வருவாய் அலுவலர் பிராபகரன் அளித்த புகாரின் பேரில் "அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல்(106 BNS)" என்ற பிரிவின் கீழ் நந்தம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
L&T நிறுவன பொறுப்பாளர் நரேந்திர கிருஷ்ண பிரபாகர், ப்ராஜெக்ட் மேனேஜர் டாடா ராவ், கன்ஸ்ட்ரக்சன் மேனேஜர் மல்லிகா அர்ஜுனா, மற்றொரு மேலாளர் பெனிம் உள்ளிட்ட மேலும் சில நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் நந்தம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணைக்கு பின்னர் வழக்கு பதிவு பிரிவானது மாற்றப்பட்டது. முதலில் பதியப்பட்ட "அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் (106 BNS) என்ற பிரிவை பின்னர் "கொலையாத மரணம் விளைவித்தல் (105 BNS) என்ற பிரிவாக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் பின்னர் உயிரிழந்த ரமேஷின் உடலுக்கு குரோம்பேட்டை மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவரது மனைவி ரேகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்த ரமேஷின் உடலானது கன்னியாகுமரிக்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து நந்தம்பாக்கம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்து நந்தம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்( 42) என்பது தெரியவந்தது. இவர் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் தங்கி தனியார் பில்லிங் நிறுவனத்தில் சேல்ஸ் மேலாளராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து நந்தம்பாக்கம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பாக ஆலந்தூர் வருவாய் அலுவலர் பிராபகரன் அளித்த புகாரின் பேரில் "அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல்(106 BNS)" என்ற பிரிவின் கீழ் நந்தம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
L&T நிறுவன பொறுப்பாளர் நரேந்திர கிருஷ்ண பிரபாகர், ப்ராஜெக்ட் மேனேஜர் டாடா ராவ், கன்ஸ்ட்ரக்சன் மேனேஜர் மல்லிகா அர்ஜுனா, மற்றொரு மேலாளர் பெனிம் உள்ளிட்ட மேலும் சில நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் நந்தம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணைக்கு பின்னர் வழக்கு பதிவு பிரிவானது மாற்றப்பட்டது. முதலில் பதியப்பட்ட "அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் (106 BNS) என்ற பிரிவை பின்னர் "கொலையாத மரணம் விளைவித்தல் (105 BNS) என்ற பிரிவாக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் பின்னர் உயிரிழந்த ரமேஷின் உடலுக்கு குரோம்பேட்டை மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவரது மனைவி ரேகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்த ரமேஷின் உடலானது கன்னியாகுமரிக்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து நந்தம்பாக்கம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.