நந்தா திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டரில் நடித்திருக்கும் கருணாஸ் ஒரு வசனம் சொல்வார் நீதிமன்ற காட்சியில், “பாவாடை காணாமல் போனால் கூட என்னை தான் யூவர் ஆனர் பிடிக்குறாங்க” என.. திரையில் கண்டு சிரித்தது நிஜத்தில் நடக்கத் தொடங்கியுள்ளது.
கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் பகுதியில் வீடுகளில் துவைத்து உலர வைக்கப்பட்ட உள்ளாடைகள் தொடர்ந்து திருடப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சூலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்ணம்பாளையத்தில் வசிக்கும் பொதுமக்கள், துவைத்து உலரவைக்கும் துணிகள் காணாமல் போவதாக புகார் எழுந்தன. அதிலும் குறிப்பாக பெண்களின் உள்ளாடைகளை மட்டும் டார்கெட் செய்து திருட்டு சம்பவம் நடைப்பெறுவது தொடர்கதையாக இருந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டுச்சுவர் ஏறி குதித்து உள்ளாடைகளைத் திருடிச் செல்வது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொடர் திருட்டு சம்பவங்கள் கண்ணம்பாளையம் பகுதி மக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் பகுதியில் வீடுகளில் துவைத்து உலர வைக்கப்பட்ட உள்ளாடைகள் தொடர்ந்து திருடப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சூலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்ணம்பாளையத்தில் வசிக்கும் பொதுமக்கள், துவைத்து உலரவைக்கும் துணிகள் காணாமல் போவதாக புகார் எழுந்தன. அதிலும் குறிப்பாக பெண்களின் உள்ளாடைகளை மட்டும் டார்கெட் செய்து திருட்டு சம்பவம் நடைப்பெறுவது தொடர்கதையாக இருந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டுச்சுவர் ஏறி குதித்து உள்ளாடைகளைத் திருடிச் செல்வது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொடர் திருட்டு சம்பவங்கள் கண்ணம்பாளையம் பகுதி மக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.