தமிழ்நாடு

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில், 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இன்றிரவு திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வரும் நிலையில், தூத்துக்குடியில் ரூ.452 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

மாலத்​தீ​வில் இருந்து இந்​திய விமானப் படைக்கு சொந்​த​மான தனி விமானத்​தில், இன்று இரவு 7.50 மணி​யள​வில் தூத்​துக்​குடி விமான நிலை​யத்​துக்கு பிரதமர் வரு​கிறார். அவருக்கு முக்​கியப் பிர​முகர்​கள் வரவேற்பு அளிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து, தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை திறந்​து ​வைத்​து, நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கிறார். இதுதொடர்பாக நடைபெறும் விழா​வில், தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி மற்​றும் மத்​திய, மாநில அமைச்​சர்​கள், நாடாளு​மன்ற, சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள், அரசு உயர​தி​காரி​கள் கலந்​து​கொள்​கின்​றனர். விழா முடிந்த பிறகு இரவு 9:30 மணிக்கு தனி விமானம் மூலம் பிரதமர் திருச்​சிக்கு புறப்​பட்​டுச் செல்​கிறார்.

இரவு திருச்சியில் தனியார் விடுதியில் தங்கும் பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார். அங்கு நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழன் கங்கையை வெற்றி கொண்டதன் 1000வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டு சிறப்பிக்க உள்ளார். அங்கு, மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசு சார்பில் 5 நாட்கள் நடைபெறும் நிலையில், 4-ஆம் நாள் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்கிறார்.

இதையடுத்து தஞ்சாவூர் சென்று 24 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக மாநில மையக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். பிரதமரின் வருகையைத் தொடர்ந்து திருச்சி, அரியலூர், தஞ்சையில் பல அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.