தமிழ்நாடு

உதைகையில் கோடை சீசன் நிறைவு.. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவு!

ஞாயிறு விடுமுறையையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் இதமான காலநிலையில் பூங்காவை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

உதைகையில் கோடை சீசன் நிறைவு.. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவு!
உதைகையில் கோடை சீசன் நிறைவு.. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவு!
நாளை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் உதகையில் கோடை சீசன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வருகை சற்று கணிசமாக குறைந்து காணப்பட்டது.

இயற்கை எழில் கொஞ்சம் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக திகழ்வதால் இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், கோடை சீசினில் நிலவக்கூடிய இதமான காலநிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கமாக இருந்தது.

அதேபோல் இந்த ஆண்டு கோடை சீசன் துவங்கிய நிலையில், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை சார்பில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி உட்பட கோடை விழாக்கள் பிரமாண்டமாக நடைபெற்றன, இதனை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் உதகையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு மற்றும் கோடை சீசன் நிறைவு பெற்றதை ஒட்டி ஞாயிறு விடுமுறை தினமான இன்று உலகப் புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வருகை சற்று கணிசமாக குறைந்து காணப்பட்டது.

இருப்பினும் வட மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பணிகளின் வருகை காணப்பட்ட நிலையில், இதமான காலநிலையில் பூங்காவை கண்டு ரசித்தும் செல்ஃபி, புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.