நேற்றைய தினம் திருச்சியில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு-
”தமிழ்நாடு அரசினுடைய கூட்டுறவுத்துறை, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை கடந்த 26/5/2025 அன்று பிறப்பித்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெற முடியாமல் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் கடன் பெற்றிருந்தால் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெற முடியாது என்கிற நிபந்தனையையும் விதித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பொதுவாகவே மற்ற மாநிலங்களை காட்டிலும் விவசாயத்திற்கான உற்பத்தி செலவு 45 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கூடுதலாக உள்ளது.
உதாரணத்திற்கு நெல் ஒரு ஏக்கருக்கு உற்பத்தி செலவு ரூ. 76,000 ஆகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ரூ. 36,000 மட்டுமே விவசாயிகளுக்கு பயிர் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே மீதமுள்ள செலவை ஈடுகட்டுவதற்காக விவசாயிகள் இரண்டு இடங்களில் பயிர் கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஓரிடத்தில் மட்டுமே பயிர் கடன் பெற முடியும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் விவசாயமும், விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் 80 % ற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போது பயிர் கடன் பெற முடியாமல் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். விவசாயிகள் ஏற்கனவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கல்வி கடன், பயிர் கடன் ஆகியவற்றை செலுத்த முடியாததால் அவர்களுக்கு சிபில் ரிப்போர்ட் மிக மிக குறைவாக உள்ளது.”
திருச்சியில் விவசாய சங்க தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம்:
”இந்த சூழ்நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே விவசாயிகளுக்கு ஒரே வாய்ப்பாக உள்ள சூழ்நிலையில் கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகள் தற்போது பயிர் கடன் பெற முடியாத சூழ்நிலை குறித்து நேற்று (24-06-2025) திருச்சி மாநகரில், ரவி மினி ஹால் அரங்கில் விவசாய சங்க தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற ஜூலை - 10 ஆம் தேதி சென்னையில் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்று திரட்டி, தமிழ்நாடு அரசு பிறப்பித்து இருக்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரத கோரிக்கை போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
ரத்து செய்யவில்லை என்றால் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்க வாரியாக விவசாயிகளை திரட்டி, கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நேற்றைய தினம் நடைப்பெற்ற கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நல சங்கம், இந்திய விவசாயிகள் சங்கம், காவிரி குண்டாறு பாசன விவசாயிகள் சங்கம், விவசாயிகள் முன்னேற்ற கழகம், ஐக்கிய விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், உய்யக்கொண்டான் கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம், குளித்தலை விவசாயிகள் குழு ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன. மேலும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத அமைப்புகள் சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.
எனவே வருகிற ஜூலை 10 அன்று சென்னையில் நடைபெற உள்ள அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாய சங்க தலைவர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
”தமிழ்நாடு அரசினுடைய கூட்டுறவுத்துறை, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை கடந்த 26/5/2025 அன்று பிறப்பித்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெற முடியாமல் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் கடன் பெற்றிருந்தால் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெற முடியாது என்கிற நிபந்தனையையும் விதித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பொதுவாகவே மற்ற மாநிலங்களை காட்டிலும் விவசாயத்திற்கான உற்பத்தி செலவு 45 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கூடுதலாக உள்ளது.
உதாரணத்திற்கு நெல் ஒரு ஏக்கருக்கு உற்பத்தி செலவு ரூ. 76,000 ஆகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ரூ. 36,000 மட்டுமே விவசாயிகளுக்கு பயிர் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே மீதமுள்ள செலவை ஈடுகட்டுவதற்காக விவசாயிகள் இரண்டு இடங்களில் பயிர் கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஓரிடத்தில் மட்டுமே பயிர் கடன் பெற முடியும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் விவசாயமும், விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் 80 % ற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போது பயிர் கடன் பெற முடியாமல் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். விவசாயிகள் ஏற்கனவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கல்வி கடன், பயிர் கடன் ஆகியவற்றை செலுத்த முடியாததால் அவர்களுக்கு சிபில் ரிப்போர்ட் மிக மிக குறைவாக உள்ளது.”
திருச்சியில் விவசாய சங்க தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம்:
”இந்த சூழ்நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே விவசாயிகளுக்கு ஒரே வாய்ப்பாக உள்ள சூழ்நிலையில் கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகள் தற்போது பயிர் கடன் பெற முடியாத சூழ்நிலை குறித்து நேற்று (24-06-2025) திருச்சி மாநகரில், ரவி மினி ஹால் அரங்கில் விவசாய சங்க தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற ஜூலை - 10 ஆம் தேதி சென்னையில் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்று திரட்டி, தமிழ்நாடு அரசு பிறப்பித்து இருக்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரத கோரிக்கை போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
ரத்து செய்யவில்லை என்றால் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்க வாரியாக விவசாயிகளை திரட்டி, கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நேற்றைய தினம் நடைப்பெற்ற கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நல சங்கம், இந்திய விவசாயிகள் சங்கம், காவிரி குண்டாறு பாசன விவசாயிகள் சங்கம், விவசாயிகள் முன்னேற்ற கழகம், ஐக்கிய விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், உய்யக்கொண்டான் கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம், குளித்தலை விவசாயிகள் குழு ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன. மேலும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத அமைப்புகள் சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.
எனவே வருகிற ஜூலை 10 அன்று சென்னையில் நடைபெற உள்ள அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாய சங்க தலைவர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.