ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் அச்சுறுத்தல் தரும் விதமாக உள்ளதாக அந்நாடு மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்கதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிலவி வருகிறது.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்:
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பலனில்லை என்று ஈரான் தெரிவித்தது.
இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் போக்க அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் களத்தில் இறங்கியது. ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்பஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகர தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறியிருந்தது.
ஈரான் பதிலடி:
இந்த நிலையில், நேற்று (ஜூன் 23) கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் நோக்கி குறைந்தது ஆறு ஏவுகணைகளை ஏவியது. இதில் சில ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன. மேலும் ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கத்தார், “பதிலடி கொடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது. ஏவுகணைகள் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டது. மேலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை” எனத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
இதனைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில், “கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் நடந்த தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை. ஈரான் முன்பே அறிவித்ததால் காயம், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது, ஈரானுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார். மேலும், மற்றொரு பதிவில், இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டன. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளும் முடிந்தவுடன், சுமார் 6 ஆறு மணிநேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து, 12 மணிநேரத்தில் இஸ்ரேலும் போர்நிறுத்தத்தைத் தொடங்கும். அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் மறுப்பு:
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தற்போதைக்கு, எந்தவிதமான போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த 'ஒப்பந்தமும்' மேற்கொள்ளப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்:
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பலனில்லை என்று ஈரான் தெரிவித்தது.
இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் போக்க அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் களத்தில் இறங்கியது. ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்பஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகர தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறியிருந்தது.
ஈரான் பதிலடி:
இந்த நிலையில், நேற்று (ஜூன் 23) கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் நோக்கி குறைந்தது ஆறு ஏவுகணைகளை ஏவியது. இதில் சில ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன. மேலும் ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கத்தார், “பதிலடி கொடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது. ஏவுகணைகள் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டது. மேலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை” எனத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
இதனைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில், “கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் நடந்த தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை. ஈரான் முன்பே அறிவித்ததால் காயம், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது, ஈரானுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார். மேலும், மற்றொரு பதிவில், இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டன. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளும் முடிந்தவுடன், சுமார் 6 ஆறு மணிநேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து, 12 மணிநேரத்தில் இஸ்ரேலும் போர்நிறுத்தத்தைத் தொடங்கும். அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் மறுப்பு:
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தற்போதைக்கு, எந்தவிதமான போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த 'ஒப்பந்தமும்' மேற்கொள்ளப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.