K U M U D A M   N E W S

Author : MUTHUKRISHNAN MURUGAN

2 வருடம்.. 10 இயக்குநர்கள்.. சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ்!

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய 10 இயக்குநர்களுடன், முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் கைக்கோர்க்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர் பேட்டி

மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என ஓசூரில் நடைப்பெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.

டெல்லி PWD உலக சாதனை: ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்கள் சீரமைப்பு!

ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்களை சீரமைத்து டெல்லி மாநில பொதுப்பணித்துறை உலக சாதனை படைத்துள்ளது.

நடுவானில் பயணிக்கு நேர்ந்த சிக்கல்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மும்பையில் இருந்து சென்னைக்கு 162 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்த விமானமானது, நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளது. உடல் நலம் பாதித்த பயணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது விமானம்.

விஜய் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்டாரா? திருமாவளவன் கேள்வி

”பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை கொள்கைத் தலைவராக விஜய் ஏற்றுக் கொண்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் மக்கு.. பல செலிபிரிட்டிகள் எஸ்கேப்: பின்னணி பாடகி சுசித்ரா!

போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ள நிலையில், பல திரை நட்சத்திரங்கள் தப்பித்து விட்டார்கள் என பின்னணி பாடகி சுசித்ரா குமுதம் ரிப்போர்ட்டருக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

போலீசார் பிடியில் நடிகர் கிருஷ்ணா.. போதைப் பொருள் தொடர்பாக விடிய விடிய விசாரணை!

போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

7 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது.. பொதுமக்கள் நிம்மதி

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சிறுமியை தாக்கி இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தையானது, வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று காலை சிக்கியுள்ளது.

Shamar Joseph: ஆஸி., டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்த கருப்பு தங்கம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு சுருண்டது. காயத்திலிருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. அச்சத்தில் கல்வியாளர்கள்

2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.