K U M U D A M   N E W S

அரசியல்

தொகுதி மறுவரையறை.. ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின்.. கர்நாடகா பறந்த பொன்முடி

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு தமிழக அமைச்சர் பொன்முடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.

இனி மாதம் ரூ.2500.. புதுச்சேரி பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரங்கசாமி!

 21 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, இனி 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை.. ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்த எ.வ.வேலு

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்தார்.

PM SHRI பள்ளி விவகாரம்.. இந்தாங்க உங்க லெட்டர்! தர்மேந்திர பிரதான் பதிவு.. பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்

பிஎம்-ஸ்ரீ பள்ளி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள கடிதத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரம்.. ஒடிசா முன்னாள் முதல்வரை சந்தித்த தமிழக குழு

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் குழு  இன்று ஒடிசா சென்ற நிலையில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

மக்களை மாடுகள் போல் நடத்துகிறார்.. விஜய் மீது இஸ்லாமிய ஜமாத் குற்றச்சாட்டு

மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்துவதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் குற்றம்சாட்டியுள்ளது.

PM SHRI.. யூ-டர்ன் அடித்தார் உங்கள் சூப்பர் முதல்வர்: MP பேச்சால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி

PM SHRI திட்டத்தை தமிழக அரசு ஒப்புக்கொண்டதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்றத்திலுள்ள திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். 

உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது.. ஸ்டாலினை விளாசிய தமிழிசை

தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு தொகுதி மறுவரையறை பிரச்சினையை ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்றும் அவரது இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

போராடி தான் இன்று  இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளோம் - திருமாவளவன்

நாம் போராடி போராடி தான் இன்று  இந்த அங்கீகாரத்தை பெற்றிக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கண்ட்ரோலில் மாஜிக்கள்? பாஜக வசமாகும் கொங்கு..? திருப்புமுனை ஏற்படுத்திய திருமணம்..!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாஜிக்கள் அண்ணாமலை வசம் வந்துவிட்டதாகவும், அதிமுகவின் பலமாக கருதப்படும் கொங்கு மண்டலம் பாஜக கண்ட்ரோலில் சென்றுவிட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் எடப்பாடி பழனிசாமியை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.