K U M U D A M   N E W S
Promotional Banner

அரசியல்

அதிமுக-பா.ஜ.க. கூட்டணியை உடைப்பது நோக்கம் அல்ல-திருமாவளவன்

குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்

"அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்தை தடுத்து நிறுத்துங்க" - பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு

தனது அனுமதியின்றி கட்சியின் கொடி, சின்னம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு போன்றவற்றை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்று தமிழக டிஜிபியிடம் மனு ராமதாஸ் தரப்பில் மனு

குரூப் 4 தேர்வர்களை பலியாக்குவதில் நியாயமில்லை- அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தமிழ் பாடத்தில் கேட்ட 100 கேள்விகளில் 50க்கும் மேற்பட்டவை பாடத்திட்டத்தில் இல்லாதது எனவும் இதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் எனது நெருங்கிய நண்பர்.. நயினார் ஓப்பன் டாக்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் ஸ்டாலின் அலுவல்களை மேற்கொள்வதை வரவேற்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

உங்களுடன் ஸ்டாலினா? ஊழலுடன் ஸ்டாலினா? அன்புமணி கேள்வி

தமிழக அரசால் நடத்தப்படுவது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களா அல்லது ‘ஊழலுடன் ஸ்டாலின்’ முகாம்களா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உரிமைத்தொகை: நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம்- தவெக எச்சரிக்கை

பிளவுவாத கொள்கையை முன்னெடுக்கும் பாஜகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு திமுக மக்களை ஏமாற்றுகிறது என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு

மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் பதவியும், மரியாதையும் இருக்காது- அண்ணாமலை

“பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத்தான் பொதுமக்கள் எம்எல்ஏகளை தேர்ந்தெடுத்தார்களே தவிர, அவர்களை அவமானப்படுத்த அல்ல” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி வென்டிலேட்டரில் இருக்கிறது- இபிஎஸ் விமர்சனம்

திமுக ஆட்சி போக வேண்டிய நேரத்தில், ஆட்சிக்கு வென்டிலேட்டர் வைத்துள்ளதாகவும் 2026-ல் அதை பிடிங்கினால் ஆட்சி போய்விடும் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இன்னும் 8 மாசம்தான்.. அறிகுறி தெரியுது.. அண்ணாமலை ஆருடம்

திமுக கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், 2026 தேர்தல் திமுகவுக்கு மிக மோசமான தேர்தலாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும் என்றும் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திமுகவின் ஊதுகுழலாக சிபிஎம் செயல்படுகிறது- நயினார் நாகேந்திரன்

தொழிலாளர் நலனை சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது விவசாயிகள் நலனையும் சீரழிக்கத் துவங்கிவிட்டது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

3-வது அணிக்குத் தமிழகத்தில் அணி இல்லை: CPI திட்டவட்டம்

தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்வர் ராஜா அதிரடி

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எவ்வளவோ சொல்லி பார்த்தேன், அதை எல்லாம் கேட்பதற்கு தயாராக இல்லை என்று அதிமுகவின் மூத்த தலைவரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

ஓடிபி ஏன் கேட்குறீங்க? திமுகவின் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரச்சாரத்திற்கு சிக்கல்

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஓடிபி (OTP) பெற இடைக்காலத் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

கந்துவட்டியும் கிட்னி திருட்டும்.. அண்ணாமலை சந்தேகம்

விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களைக் கந்து வட்டிக்கு உள்ளாக்கி, பின்னர் கிட்னி திருட்டு கும்பலிடம் சிக்கவைக்கப்பட்டார்களா? என்று சந்தேகம் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா- அதிமுகவினர் ஷாக்!

அதிமுகவின் அமைப்புச்செயலாளராக பதவி வகித்து வந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் போன்ற கட்சிகளை தடை செய்ய வேண்டும்- கிருஷ்ணசாமி

“கள் உள்ளிட்ட மது போதை பொருட்களுக்கு ஆதரவு தரும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை தடை செய்தால்தான் மக்கள் மத்தியில் போதைப்பழக்கம் இல்லாமல் போகும்” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

குப்பை மேடாக மாறிவரும் தமிழக மாநகரங்கள்- நயினார் நாகேந்திரன்

குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘திமுக பாடி போன லாரி, டயர் போன பேருந்து’- ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

“திமுக பாடி போன லாரி, டயர் போன பேருந்து. இதனால் அந்த வண்டி ஓட வாய்ப்பு இல்லை” என்று முன்னாள் மைச்சார் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளளார்.

அவர்களது பெயரை உச்சரிக்க விரும்பவில்லை- அமைச்சர் சேகர்பாபு

“பொய்யையே கருத்தாக கொண்டிருப்பவர்களுக்கு புனித தளத்தில் அவர்களது பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.

அமித்ஷா - இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது- அண்ணாமலை பேட்டி

“அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷா - இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது- சீமான் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு ஒரு ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது என்று சீமான் விமர்சித்துள்ளார்.

குற்றம் சாட்டியவர்களையே பணிநீக்கம் செய்யும் திமுக அரசு- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று எழும் குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பதோடு, அவ்வாறு குற்றம் சாட்டியவர்களையே திமுக அரசு பணிநீக்கம் செய்வது கடும் கண்டனத்திற்குரியது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது – சஞ்சய் சிங் அறிவிப்பு!

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியதாக, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும்- சிபிஎம் வலியுறுத்தல்

நீதிமன்ற தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கப்படும் நிலையில், மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.