கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடுவோம்-திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் கன்னடம் குறித்து பதவிக்காக கமல் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றார் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக நயினார் நியமிக்கப்பட்டதில் இருந்தே அண்ணாமலையின் மவுசு கட்சியில் குறையத் தொடங்கியதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது, எனவே, அவர் தனக்கான தனி ரூட்டை எடுக்கத் தொடங்கியுள்ளதாகவும், இதனால் டெல்லி தலைமை கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராமதாஸ் தனது கொள்கை வழிகாட்டி மட்டுமல்ல - குலதெய்வம் என தெரிவித்துள்ள அன்புமணி, பாமகவுக்கு தானே தலைவர் எனவும் அறிவித்துள்ளார்.
பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்பட்டதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். நிறுவனரும், தலைவரும் மாறி, மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், பாமகவின் தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக திமுக தலைமை வாய்ப்பளிக்காதது வருத்தம் தான். இருந்தபோதும் தமிழ்நாட்டின் நலன் கருதி நாங்கள் கூட்டணியில் தொடர்வோம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.
பாமகவின் ராமதாஸ்- அன்புமணி இடையேயான பிரச்சினை கட்டுக்குள் மீறி சென்றுள்ள நிலையில், சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்.எல்.ஏ அருள், தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியினை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை ராமதாஸிடம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாமல்லபுரம் பகுதியில் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கிய நிலையில், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் “இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்” என மறைமுகமாக தேர்தல் குறித்து கொக்கி போட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
திமுகவிற்கு பெண்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை குறைக்கவே திமுக அரசை பா.ஜ.க C- டீமான விஜய் குறை கூறுகிறார் என்று திருச்சியில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க-விற்கு ஏற்கனவே 2 முறை எம்.பி. பதவி வந்த போது அன்புமணிக்கும், ஜி.கே.வாசனுக்கும் கொடுத்தார்கள். தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. இ.பி.எஸ் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறைவதற்குள் பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த மே 16 ஆம் தேதி கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்த போதே, நான் செத்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது, வரவேற்கத்தக்கது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
”ED மீது பயம் இல்லாதவர் தனது நண்பர்களை ஏன் லண்டனுக்கு அனுப்ப வேண்டும்?” என உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடைப்பெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
’தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
’தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே’ என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திமுக தலைமையிலான அரசை கடுமையாக சாடியுள்ளார்.
’பவன் கல்யாண் நடிகர், அவர் வேடம் போடலாம். தமிழக முதலமைச்சர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது’ என சபாநாயகர் அப்பாவு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கருணாநிதியின் கனவாக இருந்ததாகவும், தற்போது எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் இரட்டைவேடம் போடுவதாகவும் தெலங்கானா துணை முதல்வர் பவன்கல்யாண் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி
நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.