K U M U D A M   N E W S

???????

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!

மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

கோவையில் எய்ம்ஸ்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வைத்த கோரிக்கை பட்டியல்

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்ற நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

ரிசர்வ் வங்கிக்கு இது தெரியாதா? தவெக தலைவர் விஜய் அறிக்கை

ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அடிமை கட்சியா நாங்க? ED குறித்து துணை முதல்வர் உதயநிதி பேட்டி

புதுக்கோட்டையில் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற உதயநிதி, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ED-க்கு மட்டுமல்ல.. மோடிக்கும் பயப்பட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

தூக்கமில்லை..மன உளைச்சல்.. மனமுடைந்து பேசிய அன்புமணி ராமதாஸ்

”என்னைப் பொறுத்தவரை நான் என்ன தப்பு பண்ணேனு எனக்கு தெரியல. எதனால் என்னை பதவியிலிருந்து நீக்கினார்கள்” என அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் மனமுடைந்து பேசியுள்ளார்.

நெருப்பில்லாமல் புகையாதே.. விஜய்யின் தவெகவில் அருண்ராஜ் இணைகிறாரா?

தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் ஆலோசனைகளை அருண் ராஜ் IRS வழங்கி வருகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்கிற பேச்சு எழுந்துள்ளது.

கீழடி அகழாய்வுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக? MP சு.வெங்கடேசன் சரமாரி கேள்வி

“தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்” என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது என MP சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

நண்பா நண்பீஷ் ரெடியா இருங்க.. திமுகவில் இணைந்த தவெக பிரபலம் வைஷ்ணவி

கட்சி பணிகளில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி தவெகவிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

கூட்டணியிலிருந்து வெளியே வாங்க திருமா.. விருப்பத்தை தெரிவித்த நயினார்

”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

தமிழக உரிமை விவகாரத்தில் முதலமைச்சர் சமரசம் செய்யமட்டார்- அமைச்சர் மனோ தங்கராஜ்

எப்போதும் நிரந்தரமான விலையை தரும் ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.

ஆள தெரியாத மோடி.. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி

ஆள தெரியாத மோடி இந்தியாவை ஆள வந்ததற்கு பிறகு தான் பெரிதளவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், மதக் கலவரத்தை தூண்டுவது சிறுபான்மையினரை நசுக்குவது போன்ற செயலில் தான் மோடி கவனம் செலுத்துவதாகவும் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டியளித்துள்ளார்.

பில்லியோ? புஸ்ஸியோ? TVK கூட்டணி குறித்து ஹெச்.ராஜா கமெண்ட்

”த.வெ.க தலைவர் விஜய் கூட்டணி வைப்பதும், தனித்து போட்டியிடுவதும் அவரது விருப்பம். தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது விஜய்-க்கு நல்லது” என மதுரையில் ஹெச்.ராஜா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்தியா தர்மசத்திரமா? உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு திருமாவளவன் ஆட்சேபனை

உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2026-ல் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் - திருமாவளவன் பேட்டி

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறு சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு எதிராக உள்ளது - துரை வைகோ

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் சொல்லவில்லை - தமிழிசை செளவுந்திரராஜன் அதிரடி

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக சார்பாகவும், கட்சியின் தலைவர் விஜயிடமிருந்தும் எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

நான் மன்னிப்பு கேட்கிறேன்.. கொதித்தெழுந்த இராணுவ வீரர்கள்.. சரண்டர் ஆன செல்லூர் ராஜூ!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசுகையில் இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகிய நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் செல்லூர் ராஜூ.

ஏழு மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்.. செந்தில்பாலாஜிக்கு ப்ரமோஷன் ? அறிவாலயம் அதிரடி!

தி.மு.க.வை நான்கு திசைகளிலும் இருந்து ஆபத்துகள் சூழ்ந்துள்ள நிலையில் அதை சமாளிக்க ஏழு பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் ஸ்டாலின், தமிழகத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து ஏழு பேரின் கைகளில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே தொண்டர்களின் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

'திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால்.. எங்களுக்கு இன்னும் ஆஃபர் இருக்கு - வன்னியரசு Open வார்னிங்

2026 தேர்தலுக்கு பாமகவை கூட்டணிக்குள் இழுக்க திமுக பல திட்டங்களை தீட்டி வருவதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால் கூட்டணியில் இருந்து நாங்கள் விலகுவோம் என வன்னியரசு அறிவாலயத்திற்கு வார்னிங் கொடுத்துள்ளார்.

படுத்துக் கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பது எப்படி? அப்செட்டிலும் தளராத ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்துள்ளதால் தைலாபுர வட்டாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தங்கமணியே தப்பு செய்றாருங்க..கொதிக்கும் ரத்தங்கள்: அடக்கும் எடப்பாடி

எடப்பாடியுடனான நெருக்கத்தை கொஞ்ச காலமாக குறைத்திருக்கும் மாஜி அமைச்சர் தங்கமணி மீது புகார்கள் வரிசைகட்டுகின்றன.

அமித்ஷா எங்களை சந்திக்காதது வருத்தமளிக்கிறது - ஓ.பன்னீர் செல்வம்

சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

அரசியலில் யாரும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க முடியாது- ஆர்.எஸ்.பாரதி பளீச்

தி.மு.க தலைமைக்கு அப்போதும் இப்போதும் உறுதுணையாக இருந்து எதிர்க்கட்சிகள் வீசும் விமர்சன பந்துகள் அனைத்தையும் சிக்ஸராக அடித்து துவம்சம் செய்வதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நிகர் யாருமில்லை.

MK Stalin Ooty Visit : செல்லூர் ராஜூ ஒரு கோமாளி.. நோஸ் கட் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

CM MK Stalin Speech About Sellur Raju : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் செல்லூர் ராஜூ பேசியிருந்த நிலையில், ”அவர் ஒரு கோமாளி..அவர் பேசுவதை பெரிதுப்படுத்த விரும்பவில்லை” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு.. நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் என்ன?

திருவிடந்தையில் பாமக சார்பில் சித்திரை முழுநிலவு மாநாட்டில் மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்,பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை மேலும் 2% உயர்த்த வேண்டும் என்பது உட்பட மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.