K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

செங்கோட்டையனைத் தொடர்ந்து அவரது 7 ஆதரவாளர்கள் நீக்கம்; "பதவி பறிப்பு மகிழ்ச்சி" எனச் செங்கோட்டையன் பேட்டி!

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 7 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையன் பதவி பறிப்பு..எடப்பாடி பழனிசாமி அதிரடி.. அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்!

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கப் பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த நிலையில், அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாகப் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல் அல்ல.. நயினார் நாகேந்திரன் அதிரடி!

அதிமுகவுடன் பாஜக அமைத்துள்ள கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல, பறக்கப்போகும் பெரிய ஜெட் விமானம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

'செங்கோட்டையன் கருத்து சரிதான்..' ஓ. பன்னீர் செல்வம் ஆதரவு!

"பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன் பேட்டி!

"எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை நிச்சயம் அகற்ற முடியும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

பிரிந்து சென்றவர்களை 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும்.. இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கெடு!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் உங்கள் முன் நிற்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

"பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செல்லும்.. இபிஎஸ்-க்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? அடித்து விரட்டுவதற்கா?’- அன்புமணி கண்டனம்!

“உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? அல்லது அடித்து, உதைத்து விரட்டுவதற்கா?” என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

16 குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க அன்புமணிக்கு கெடு.. ராமதாஸ் மீண்டும் எச்சரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் அதிகார மோதல், கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அன்புமணி மீது சுமத்தப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்குச் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கெடு விதித்துள்ளார்.