K U M U D A M   N E W S

தமிழ்நாடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்!

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.10,000 அபராதமும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி ஆபாச வீடியோ: சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நடிகை கிரண்!

பிரபல நடிகை கிரண் போலி ஆபாச வீடியோ வெளியானது குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு.. காவல்துறை விசாரணை!

மதுரையில் மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியின்போது மின்சார வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்களின் நாகரிகம் திருக்குறள் - கவிஞர் வைரமுத்து

தமிழர்களின் நாகரிகம் எது என்று கேட்டால் திருக்குறள் என கூறுங்கள் தந்தை திருவள்ளுவர் ஞான தந்தை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தென்காசி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

தென்காசி மாவட்டத்திற்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

2 ஏக்கரில் கடலை: 3 மாதத்தில் சுளையாக ரூ.80 ஆயிரம் வருமானம்!

கடலை விவசாயம் பண்ணினால் கவலை இல்லை என்று இரண்டு ஏக்கரில் கடலை விவசாயம் செய்து மூன்று மாதத்தில் 80 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறார் நீலவேணி.

என்னய்யா பேன்ட் தச்சு இருக்க? ஆத்திரத்தில் டெய்லரை கொன்ற நபர்

நாகர்கோவிலில் டெய்லர் தைத்து ஆல்டர் செய்து கொடுத்த பேன்ட் பிடிக்காததால்,டெய்லருடன் எழுந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, டெய்லரிங் கடை உரிமையாளரை கத்தரிக்கோலால் ஒருவர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடை ரெடியா இருக்கா? இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் கோவை,நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் பணியிடமாற்றம் - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு

சென்னை பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் இருளாண்டி பொன்னையா, புதுக்கோட்டை அரசு பல் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து, மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலில் நாளை தொடங்குகிறது மலர்க்கண்காட்சி!

தமிழகம் முழுவதும் கோடை வெயிலியின் தாக்குதல் அதிகரிக்கும் நிலையில், சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கிறது.