K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

பிப்ரவரி 13-ல் பொதுத்தேர்வு ஆலோசனைக் கூட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பொதுத்தேர்வு தொடர்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்.. ஏப்ரல் முதல் அமல்.. தமிழ்நாடு அரசு தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்.. உயர் நீதிமன்றம் உத்தரவு

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது போதுமான இடைவெளியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஞானசேகரனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற கோரி மனு தாக்கல்.. அபராதம் விதித்த நீதிமன்றம்

Rowdy Nagendran : தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, நாகேந்திரன் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் இரு நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக்கூறி நீதிபதிகள் அபராதம் விதித்தனர்.

அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் வெளியிட்ட ஓட்டுநர்-நடத்துநர்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் வெளியிட்ட ஓட்டுநர்-நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு.. ரயில்-விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு.. நாதக நிர்வாகி புழல் சிறையில் அடைப்பு

நாம் தமிழர் கட்சி நிர்வாகி, பெரியார் சிலையை அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றச்சாட்டு உண்மையல்ல- சீருடை பணியாளர் தேர்வாணையம் அதிரடி

ஏடிஜிபி கல்பனா நாயக் தன்னை கொல்ல சதி திட்டம் நடைபெற்றதாக புகாரளித்த நிலையில் அவர் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என சீருடை பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

கல்பனா நாயக் குற்றச்சாட்டு.. திட்டமிட்ட தீ வைப்புக்கான ஆதாரம் இல்லை- காவல்துறை விளக்கம்

காவல்துறை மூத்த அதிகாரி கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக புகார் அளித்த நிலையில் திட்டமிட்டு தீ வைத்ததற்கான ஆதாரம் இல்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.