K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

ஆற்காடு சுரேஷ் மனைவி கைது.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எகிரும் பரபரப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை செம்பியம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு.. வேண்டுமானால் குவாட்டர் வழங்கலாம்.. சீமான் காட்டம்

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு என்றும் 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Rain Update: குடை எடுத்தாச்சா...? மழை வெளுத்து வாங்கப்போகுது மக்களே!

தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் மரணம்.. ராஜ்நாத் சிங், ஸ்டாலின் அஞ்சலி!

''ராகேஷ் பால் தேச பக்தராகவும், அர்ப்பணிப்புள்ள தலைவராகவும் விளங்கினார். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை என்றென்றும் நினைவு கூறப்படும்'' என்று இந்திய கடலோர காவல் படை இரங்கல் தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறை கடும் கட்டுப்பாடு.. முழு விவரம்!

''மசூதிகளில் தொழுகை நேரங்களில், விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது. பதற்றமான பகுதிகள் வழியாகவும் அனுமதிக்க கூடாது'' என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் நியமனம்!

புதிய தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ், முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளராக இருந்து வந்தார். இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.

சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பும் மக்கள்... தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, மக்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்புகின்றனர். இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

‘கலைஞர் நினைவு நாணயம்’ - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்..

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

பயணிகளுக்கு குட் நியூஸ்.. சென்னை கடற்கரை-தாம்பரம் புறநகர் ரயில் சேவை சீரானது!

தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் ஒருநாள் முன்னதாக, அதாவது இன்றே முடிவடைந்துள்ளது. வழக்கமான அட்டவணைப்படி சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ரயில்கள் இயங்க தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாதி மறுப்பு திருமணம்: 15 வயது சிறுமி கொலை செய்த மாமனார்.. பழி தீர்க்க மாமியாருக்கு வெட்டு..

சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாத தந்தை, மகளுடைய கணவரின் 15 வயது தங்கையை கொடூரமாக கொலை செய்த நிலையில், மாமியாரை தெருக்களில் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.