K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு: நாளை காலை விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வருகிறது.

நில மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2வது முறையாக முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுப்பு... ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு ஆதரவாளர்கள் போராட்டம்... இரவிலும் பரபரப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 10 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. ''ஆனால் உண்மையான குற்றாவளிகளை போலீசார் கைது செய்யவில்லை'' என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் கொலை இல்லை; கொலை‌ மிரட்டல் குறித்து எந்த தகவலும் வரவில்லை - காவல் ஆணையர்

ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் தொடர்பான கொலை இல்லை என்றும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு கொலை‌ மிரட்டல் இருப்பதாக காவல் துறையினருக்கு எந்தவித தகவலும் வரவில்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தலித் தலைவர்கள் படுகொலை.. தனி உளவுத்துறை அமைப்பு - திருமாவளவன் கோரிக்கை

தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியான படுகொலைகளும் தலித் தலைவர்களை குறி வைத்து படுகொலை சம்பவங்களும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்... ராகுல் காந்தி, அன்புமணி, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யட்டார். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான், தமிழிசை செளந்தர்ராஜன், கமல்ஹாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்... கதறி அழுத பா ரஞ்சித்... இருவருக்கும் அப்படியொரு தொடர்பா..?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யட்டார். இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவரது உடற்கூராய்வு நிறைவுபெற்றது. அதன்பின்னர் ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்து இயக்குநர் பா ரஞ்சித் கதறி அழுதது வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை... சமரசம் இல்லாத சட்ட ஒழுங்கு தேவை... தவெக தலைவர் விஜய் இரங்கல்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய், இரங்கல் தெரிவித்துள்ளார்.

BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை... முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.. அதிகாரிகளுக்கு உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை… முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக சாடிய எடப்பாடி, அண்ணாமலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.