K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

Armstrong Wife : ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல்.. 'யாராக இருந்தாலும் விடாதீர்கள்'.. செல்வபெருந்தகை ஆவேசம்!

Selvaperunthagai on Armstrong Wife Death Threats : ''ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு, பாதுகாப்பாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். நானும் முதல்வரை சந்திக்கும்போது அது குறித்து பேச இருக்கிறேன்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

Independence Day : 05, 09, 13 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் - எந்த வழியில் செல்லலாம்: முழு விவரம்

Independence Day Parade Rehearsal : சுதந்திர தின விழாவினை ஒட்டி 05, 09, 13.08.2024 ஆகிய நாட்களில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற இருப்பதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Anbumani Ramadoss : வட்டி கட்டியே வீதிக்கு வந்த தயாரிப்பாளர்கள்.. 1,500 திரைப்படங்கள்.. ரூ.4,000 கோடி.. அன்புமணி வேதனை

Anbumani Ramadoss on Tamil Movie Producers : திரைப்படங்கள் வெளியில் வராததால் சொத்துகளை இழந்தும், வட்டி கட்டியே திவாலாகியும் வீதிக்கு வந்த தயாரிப்பாளர்கள் ஏராளம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin : 'இனி இப்படி செய்யாதீங்க'.. ஆசிரியர்களிடம் கோரிக்கை வைத்த உதயநிதி ஸ்டாலின்!

Minister Udhayanidhi Stalin Request Teacher : ''திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமாக உள்ளது. மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தைக்கு கொலை மிரட்டல்.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வந்த மர்ம கடிதம் தொடர்பாக மகாபலிபுரம் படூர் பகுதியை சேர்ந்த பள்ளி வேன் ஓட்டுநர் சதீஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகியை தட்டித் தூக்கிய போலீஸ்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இருந்த கபிலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 நாளாக தண்ணீருக்கு நடுவே பரிதவிக்கும் நாய்.. ட்ரோன் மூலம் உணவு... நீதிமன்றம் வரை சென்ற விஷயம்!

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் தாண்டி பாறைகளுக்கு நடுவே ஒரு நாய் ஒன்று சிக்கிக் கொண்டது. சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து செல்வதால் அந்த நாயால் கடந்த 4 நாட்களாக கரைக்கு வர முடியவில்லை. அந்த நாய் சுற்றிலும் ஓடும் தண்ணீருக்கு நடுவே தனித்தீவு போல் உள்ள பாறையில் சிக்கி பரிதவிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.

இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டூழியம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது!

தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழ்நாடு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Annamalai : கர்நாடகாவில் பிஸ்னஸ்.. துரைமுருகன் மீது சந்தேகம் உள்ளது.. அண்ணாமலை சராமாரி தாக்கு

Annamalai on Duraimurugan : காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட துரைமுருகன் பேசவில்லை என்பதால் பணம் வாங்கினாரா என்ற சந்தேகம் உள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Seeman : வயநாடு போனீங்களே.. தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு வந்தீங்களா? - ராகுலுக்கு சீமான் கேள்வி

Seeman on Rahul Gandhi Wayanad Visit : வயநாடுக்குச் சென்ற ராகுல் காந்தி தூத்துக்குடி, திருநெல்வேலி மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தபோது தமிழகத்திற்கு ஏன் வரவில்லை என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.