K U M U D A M   N E W S

Kallasarayam Issue : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்.. ஒருநபர் ஆணையத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு

Kallakurichi Kallasarayam Issue : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்திற்கு மேலும் 3 மாத கால நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழக மீனவர்கள் தொடர் கைது... தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

MDMK Vaiko on Tamil Nadu Fishermen Arrest : தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சம்பளத்தில் கை வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்.. ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி

Govt Elementary School Teacher Salary Deduction : காலையில் நிர்வாகிகளிடம் இணக்கமாக பேசி போராட்டத்தை தள்ளி வைத்த நிலையில், மாலையில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 24-09-2024

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 24-09-2024

‘வாழ்விழந்த மீனவர்கள்.. 40 எம்.பி.க்கள் எங்கே?’..எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

''தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் ஸ்டாலின், தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்ற சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று ஜாமின் மனுக்களை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.   

ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு.. ஒன்று திரண்ட கிராம மக்கள்...

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூட்சியாக மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

"எங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை.."போராட்டத்தில் இறங்கிய மக்கள்..எழும்பூரில் பரபரப்பு

எழும்பூர் கண்ணப்பர் திடல் அமைச்சர் உதயநிதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் குடியிருப்பு ஒத்துக்கீடு செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். இந்திய 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

மீனவர்கள் 5 பேர் கைது... சிங்களப் படையினர் அட்டகாசம்... மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கேள்வி!

Fishermen Arrest in Kanyakumari : கன்னியாகுமரியில் இருந்து ஆந்திரா சென்ற மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

”சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்களின்...” பதவியேற்ற கையோடு இலங்கை அதிபர் சொன்ன விஷயம்..

இலங்கையின் புதிய அதிபராக வெற்றி வாகை சூடி பதவியேற்றுள்ள இடதுசாரி அதிபர் அநுர குமார திசநாயக சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்களின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம். ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம் என தெரிவித்துள்ளார்.

ஒத்தைக்கு ஒத்தை பேசலாம் வாங்க.. திமுகவுக்கு நேரடி அழைப்பு விடுத்த எஸ்.பி.வேலுமணி

எம்.ஜி‌.ஆர் இன்னும் 2 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்திருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.  சூலூர் அடுத்த கிட்டாம்பாளையத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக தயாரா என சவால் விடுத்தார்..

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 23-09-2024

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 23-09-2024

கோயிலுக்கு சென்றபோது நேர்ந்த விபத்து.. பரிதாபமாக பறிபோன உயிர்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுநெமிலி பகுதியில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

'இலங்கையில் புதிய அதிபர்.. இப்பயாவது இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுங்க'.. அன்புமணி கோரிக்கை!

''இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

ஏடிஎம்-ஐ உடைத்து சுமார் ரூ.1 கோடி அபேஸ்

ஆந்திரா: விஸ்வேசரய்யா சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தபோது எச்சரிக்கை ஒலி அடித்ததால் கொள்ளையர்கள் ஓட்டம். இன்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏடிஎம் சென்றபோது கொள்ளை போனது தெரியவந்துள்ளது

புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 22-09-2024

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 22-09-2024

பாடகர் மனோ மகன்களுக்கு முன்ஜாமின்..

இரு தரப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரை தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் ஜாகிர், ரபீக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரும் 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.  

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21-09-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

விரைவுச் செய்திகள் | 21-09-2024 | Tamil News | Today News

அன்றாட நிகழ்வுகள் குறித்த முக்கிய செய்தி தொகுப்பினை இங்கே காணலாம்.

மனோ மகன்களுக்கு தர்ம அடி... அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்... குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!

தன் மகன்கள் மீதும், தன் மீதும் 10 க்கும் மேற்பட்டோர்கள் தாக்குதல் நடத்தியதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பள்ளி சீருடையில் மாணவிக்கு வளைகாப்பு.. வைரலான ரீல்ஸ்... ஆசிரியை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு சக மாணவிகள் வளைகாப்பு செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோ வைரலானது. இந்நிலையில் பள்ளி ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிட நீக்கம் செய்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.  

ஒருவழியாக மமதாவின் வேண்டுகோளை ஏற்ற மருத்துவர்கள்.. 41 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்!

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்து மமதா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் அவரிடம் , கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சுகாதார செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

தாக்கப்படும் தமிழக மீனவர்கள்.. நிரந்தர தீர்வு காண வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.