K U M U D A M   N E W S

எம்எஸ்சி எல்சா-3 கப்பல் விபத்து: எம்எஸ்சியின் அகிடேட்டா-2 கப்பலை சிறை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு!

எம்எஸ்சி எல்சா-3 கப்பலில் விபத்து ஏற்பட்ட நிலையில், அந்நிறுவனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில், இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், எம்எஸ்சியின் மற்றொரு கப்பலான அகிடேட்டா-II கப்பலையும் சிறை பிடிக்க செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளா கிரிக்கெட் லீக் போட்டி.. அதிக தொகைக்கு ஏலம் போன சஞ்சு சாம்சன்!

கேரளா கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ராஜஸ்தான் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் அதிக தொகைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற புதிய சாதனயை படைத்துள்ளார்.

‘ஜானகி’ என்ற பெயரால் சர்ச்சை.. போராட்டம் அறிவித்த மலையாள திரையுலகம்

மத்திய தணிக்கை வாரியத்தின் அலுவலகம் முன்பு வரும் 30 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கேரள கடலில் தீப்பிடித்த சிங்கப்பூர் கப்பல்.. வெடித்துச்சிதறும் அபாயம்..!

கேரளக் கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் வான்ஹாய் 503 என்ற சரக்குக் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தாய், தந்தைக்குப் பதிலாக ‘பெற்றோர்’ - திருநங்கை தம்பதி தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருநங்கை தம்பதியரின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் தாய், தந்தைக்குப் பதிலாக ‘பெற்றோர்’ சொன்னால் போதுமானது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உளவாளி ஜோதிக்கும் முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக வைத்த பகீர் குற்றச்சாட்டு..! உண்மை என்ன?

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மருமகனுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக வைத்துள்ள குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் இருந்து மீட்பு குழுவினர் வருகை... கண்டெயினரை மீட்கும் பணி தீவிரம்!

வானியக்குடி கடலில் மிதக்கும் கண்டெயினரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத்தில் இருந்து மீட்பு குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.

உதகை சுற்றுலா வந்த கேரள சிறுமிக்கு நேர்ந்த சோகம்...கலங்கி நின்ற குடும்பம்

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கும் பருவமழை: 24 மணி நேரத்திற்குள் தொடங்க வாய்ப்பு!

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரசியல் அமைப்பை பாதுகாக்க முன் வாருங்கள்.. 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

மசோதா கால நிர்ணயம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட விவகாரத்தில் அரசியல் அமைப்பை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.