K U M U D A M   N E W S

அதானி குழும முறைகேட்டில் 'செபி' தலைவர் மாதபிக்கும் தொடர்பு?.. ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டை மாதபி புரி புச் முழுமையாக மறுத்துள்ளார். ''எங்கள் மீது ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதில் எந்த உண்மையும் இல்லை'' என்று கூறியுள்ளார்.

'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'இந்தியாவில் விரைவில் பெரிய சம்பவம் இருக்கு'.. பரபரப்பை பற்ற வைத்த ஹிண்டன்பர்க்!

இந்தியாவில் பிரபலமான தொழில் அதிபர் கெளதம் அதானியை கதிகலங்க வைத்தததான் இந்த ஹிண்டன்பர்க். அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது.

'முதல்வர் ஸ்டாலினே உதயநிதியை ட்ரோல் பண்ணிட்டார்... நாங்க என்ன சொல்ல?' - கலாய்த்த அண்ணாமலை!

''தமிழக முதல்வர் ஸ்டாலினே வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை எனக்கூறி உதயநிதியை ட்ரோல் (Troll ) பண்ணியுள்ளார். முதல்வர் ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்து விட்டதால் இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்வது?'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களிடம் உருகிய பிரதமர் மோடி.. கேரளாவுக்கு அளித்த வாக்குறுதி என்ன?

''இது சாதாரண பேரழிவு கிடையாது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நொறுங்கியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Olympics: ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம்... டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு!

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று, டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Pondicherry Rain: புதுச்சேரியில் அடித்து நொறுக்கிய கனமழை... கரைபுரண்டோடிய வெள்ளம்... மக்கள் அவதி!

புதுவையில் நள்ளிரவு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Vijayakanth: “வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார்.” கோயில் போல வடிவமைக்கப்பட்ட விஜயகாந்த் நினைவிடம்!

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடம் கோயில் போல வடிவமைக்கப்பட்டுள்ளது, ரசிகர்களிடமும் தேமுதிக தொண்டர்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் நெருங்கிய நண்பர்.. கருத்து வேறுபாடு இல்லை.. பால் கனகராஜ் விளக்கம்

ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் நானும் ஆம்ஸ்ட்ராங்கும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தோம் என்று பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம்... ஒலிம்பிக் முடிவதற்குள் முடிவு தெரியும்..

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து, ஒலிம்பிக் தொடர் முடிவதற்குள் இறுதி செய்யப்படும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தேர்தல் முன்விரோதம் காரணமா?... பால் கனகராஜிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை

பார் கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற கோணத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட இல்லை... இதுக்கு இப்போ அவசியம் தானா? - சீமான் காட்டம்

ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பதக்கம் வெல்லும் அளவிற்குத் தகுதியான ஒரு வீரரைக்கூட தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கத் திறனற்ற திமுக அரசு, மகிழுந்து பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத்துறை மேம்பட்டு விடுமா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதகையில் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை உதகை அரசு கலைக் கல்லூரியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்த பின்பு பயனாளிகளுக்கு வங்கி கணக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.

அரியலூரில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்!

அரியலூரில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வழங்கினார்.

நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை; மீண்டும் முடங்கிய மலை ரயில் போக்குவரத்து!

தொடர் மழை காரணமாக பிரபல ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

"கருணாநிதியாலேயே முடியல.. ஸ்டாலின் ஜுஜூபி” - செல்லூர் ராஜு தாக்கு

கருணாநிதியாலே கூட ஒருமுறைக்கு பின்னர் மறுமுறை ஆட்சி செய்ய முடியாத நிலையில் ஸ்டாலின் எல்லாம் ஜுஜூபி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையில் தூத்துக்குடி மீனவர்கள்; கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்துள்ளனர்.

Aug 9 OTT Release: தாத்தா வர்றாரு... இந்தியன் 2 பார்க்க ரெடியா... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

கமலின் இந்தியன் 2 திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. இதனுடன் மேலும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகவுள்ளன.

Olympics: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி... இந்திய அணிக்கு வெண்கலம்... ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபாரம்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. தற்போது நடைபெற்ற ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இடி, மின்னலுடன் மழை! 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. யாருக்கு குடை அவசியம்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 8) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வீட்டு லோன், கார் லோன் வாங்கியவர்கள் நிம்மதி.. ஆர்பிஐ கவர்னர் சொன்ன குட் நியூஸ்!

ரெப்போ வட்டி விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த வட்டி விகிதம் தொடர்ந்து 9வது முறையாக மாற்றமின்றி தொடர்வதாக தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வேர்களைத் தேடி தமிழகம் வந்த வெளிநாட்டவர்கள்.. தஞ்சை கல்லணையை பார்த்து பரவசம்

“தஞ்சை பெரிய கோயிலில் காலடி வைத்த உடன் உடலில் ஒரு வைப்ரேஷன் வந்தது” என தமிழ்நாடு அரசின் ‘வேர்களை தேடி’ திட்டத்தின் கீழ் கல்லணைக்கு வந்த கனடாவில் வசித்து வரும் தமிழ் பூர்வகுடி பெண் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகளிடம் விசாரணை.. பரபரப்பு தகவல்!

வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருவதால் ரவுடி சம்போ செந்திலை பிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவரை தேடி தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

India Vs Srilanka ODI Series: இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் என்ன?.. வீரர்கள் சறுக்கியது எங்கே?

ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக ஸ்விப் ஷாட் விளையாடும் ரிஷப் பண்ட்டுக்கு முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதே வேளையில் கொஞ்சம் கூட ஃபுட்வொர்க் (கால்களை நகர்த்தி ஆடுதல்) இல்லாமல் விளையாடும் ஷிவம் துபேவுக்கு 3 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.