K U M U D A M   N E W S

மழையில் நனையும் நெல் மூட்டைகள்.. அரசுக்கு கோரிக்கை!

விருத்தாச்சலம் அருகே நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட 25,000 நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் துயர்போக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏசி யூஸ் பண்றீங்களா?.. மத்திய அரசு கொண்டு வரும் புது ரூல்ஸ்

ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளளவும், சோதனை அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

மன்னிப்பு கோரியும் பயனில்லை.. ஓட்டுநரை தாக்கிய மேலாளர் மீது வழக்கு

அரசு பேருந்து ஓட்டுநரை செருப்பால் தாக்கிய விவகாரத்தில் உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நான்கு பேர் மீது ஐந்து பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

18 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

18 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் பதவி உயர்வு வழங்கியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பெண் செய்தியாளர் மீது துப்பாக்கி சூடு.. என்ன நடக்கிறது லாஸ் ஏஞ்சல்ஸில்?

சட்டவிரோதமாக குடியேறியவர்களை குறி வைத்து அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் போராட்டத்தினை செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் மீது ரப்பர் தோட்டாவினால் சூப்பாக்கி சுடு நடத்தப்பட்டுள்ளது. தேசிய இராணுவத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வெளியேற்ற கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் கவின் நியூசம் டிரம்புக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

வரலாறு மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு

வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது மத்திய அமைச்சருக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

திருக்குறள் சனாதனத்திற்கு நேரெதிரானது.. ஆளுநருக்கு திருமாவளவன் பதிலடி

புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

பள்ளிக்குள் புகுந்த உடும்பு.. மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்

காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளிக்குள் உடும்பு நுழைந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் ஒளி...எச்சரிக்கையை மீறிய செயலால் பரபரப்பு

சென்னையில் மூன்றாவது முறையாக தரையிறங்க வரும் விமானங்களின் மீது, சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளியை அடிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.

பலத்த காற்று வீசியதால் சரிந்து விழுந்த மேற்கூரை | Madras Motor Race Track | Kanchipuram | Chennai

பலத்த காற்று வீசியதால் சரிந்து விழுந்த மேற்கூரை | Madras Motor Race Track | Kanchipuram | Chennai