சென்னை, பெரம்பூர் பேரக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் செல்வம். இவர் ஸ்ரீ சாரதா மணி மூவிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இவரது தயாரிப்பில் "மூனு கழுத வயசு" என்ற பெயரில் புது படத்தின் பூஜை போடப்பட்டது. மறைந்த காமெடி நடிகர் மயில்சாமி மகன் இந்த படத்தில் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. மணி கார்த்திக் என்பவர் படத்தை இயக்குவது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும், தன்னுடைய படத்தை இயக்கிய மணி கார்த்திக் படத்திற்கான செலவு செய்த பணத்தை ஏமாற்றி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஏமாற்றப்பட்டது குறித்து செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அரக்கோணத்தைச் சேர்ந்த திரைப்பட உதவி இயக்குநராக இருந்த மணி கார்த்திக் என்பவர் எனக்கு அறிமுகமானார். எனக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தை தெரிந்து கொண்ட மணி கார்த்திக், ரூ. 26 லட்சம் பட்ஜெட்டில் திரைப்படம் எடுத்து தருவதாக கூறி நம்ப வைத்தார். அதனை நம்பி வீட்டை விற்று பணத்தை தயார் செய்து கொடுத்தேன். படத்திற்கு "மூனு கழுத வயசு" பெயர் வைத்தோம். டிவி பிரபலம் முக்குத்தி முருகன் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் பாடி உள்ளார். நடிகர் மயில்சாமி மகன் அன்புவை ஹீரோவாக வைத்து திருநின்றவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் படப்பிடிப்பு தொடங்கியது. மேலும், படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க பணம் இல்லாததால் வியாசர்பாடி கன்னிகாபுரத்தில் இருந்த சொந்த வீட்டை விற்று இயக்குநர் மணி கார்த்திக்கிடம் கொடுத்தேன். அவர் இன்னும் 50 லட்சம் இருந்தால் படம் எடுத்து முடிக்க முடியும் என்று கூறியதால் அதிர்ச்சியடைந்தேன்.
பிறகு இந்த படத்தை திடீரென வேறொரு தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்து விட்டதாக எனக்கு தெரிந்தது. பட உரிமைகள் அனைத்தையும் இயக்குநர் மணி கார்த்திக் அவருடைய மனைவி ராஜாமணி பெயரில் மாற்றிக் கொணடார். இதுகுறித்து நான் அவரிடம் கேட்ட போது படத்துக்கு இன்னும் நிறைய பணம் செலவாகும் அதற்காக தர்மபுரியில் உள்ள தொழில்அதிபர் ( K.G.S. Group) கோவிந்தராஜ் மற்றும் அவருடைய மகன் சக்தி இந்த படத்தை உங்களிடம் இருந்து மொத்தமாக பணம் கொடுத்து வாங்கி கொள்வதாக கூறினார். ஆனால் எந்த பணமும் இன்னும் எனக்கு தரவில்லை.
பாடகர் முக்குத்தி முருகன், மணி கார்த்திக் மற்றும் K.G.S.Group தர்மபுரியில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்தால் பணம் தருவதாக அழைத்தனர். நான் அங்கு சென்றபோது, பணத்தை தராமல் குரூப் போட்டோ எடுத்துவிட்டு அனுப்பினர். நானும் பலமுறை பிண்ணணி பாடகர் முக்குத்தி முருகன், இயக்குநர் மணி கார்த்திக் மற்றும் தொழில் அதிபர் கோவிந்தராஜ் மற்றும் சக்தி ஆகியோரை தொடர்புகொள்ள முடியவில்லை. என்னிடம் மொத்தமாக ரூ. 33 லட்சம் ஏமாற்றி விட்டனர். இந்த 4 பேர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும், தன்னுடைய படத்தை இயக்கிய மணி கார்த்திக் படத்திற்கான செலவு செய்த பணத்தை ஏமாற்றி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஏமாற்றப்பட்டது குறித்து செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அரக்கோணத்தைச் சேர்ந்த திரைப்பட உதவி இயக்குநராக இருந்த மணி கார்த்திக் என்பவர் எனக்கு அறிமுகமானார். எனக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தை தெரிந்து கொண்ட மணி கார்த்திக், ரூ. 26 லட்சம் பட்ஜெட்டில் திரைப்படம் எடுத்து தருவதாக கூறி நம்ப வைத்தார். அதனை நம்பி வீட்டை விற்று பணத்தை தயார் செய்து கொடுத்தேன். படத்திற்கு "மூனு கழுத வயசு" பெயர் வைத்தோம். டிவி பிரபலம் முக்குத்தி முருகன் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் பாடி உள்ளார். நடிகர் மயில்சாமி மகன் அன்புவை ஹீரோவாக வைத்து திருநின்றவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் படப்பிடிப்பு தொடங்கியது. மேலும், படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க பணம் இல்லாததால் வியாசர்பாடி கன்னிகாபுரத்தில் இருந்த சொந்த வீட்டை விற்று இயக்குநர் மணி கார்த்திக்கிடம் கொடுத்தேன். அவர் இன்னும் 50 லட்சம் இருந்தால் படம் எடுத்து முடிக்க முடியும் என்று கூறியதால் அதிர்ச்சியடைந்தேன்.
பிறகு இந்த படத்தை திடீரென வேறொரு தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்து விட்டதாக எனக்கு தெரிந்தது. பட உரிமைகள் அனைத்தையும் இயக்குநர் மணி கார்த்திக் அவருடைய மனைவி ராஜாமணி பெயரில் மாற்றிக் கொணடார். இதுகுறித்து நான் அவரிடம் கேட்ட போது படத்துக்கு இன்னும் நிறைய பணம் செலவாகும் அதற்காக தர்மபுரியில் உள்ள தொழில்அதிபர் ( K.G.S. Group) கோவிந்தராஜ் மற்றும் அவருடைய மகன் சக்தி இந்த படத்தை உங்களிடம் இருந்து மொத்தமாக பணம் கொடுத்து வாங்கி கொள்வதாக கூறினார். ஆனால் எந்த பணமும் இன்னும் எனக்கு தரவில்லை.
பாடகர் முக்குத்தி முருகன், மணி கார்த்திக் மற்றும் K.G.S.Group தர்மபுரியில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்தால் பணம் தருவதாக அழைத்தனர். நான் அங்கு சென்றபோது, பணத்தை தராமல் குரூப் போட்டோ எடுத்துவிட்டு அனுப்பினர். நானும் பலமுறை பிண்ணணி பாடகர் முக்குத்தி முருகன், இயக்குநர் மணி கார்த்திக் மற்றும் தொழில் அதிபர் கோவிந்தராஜ் மற்றும் சக்தி ஆகியோரை தொடர்புகொள்ள முடியவில்லை. என்னிடம் மொத்தமாக ரூ. 33 லட்சம் ஏமாற்றி விட்டனர். இந்த 4 பேர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.