K U M U D A M   N E W S

மோசடி

காதல் ஆசை காட்டிய துணை நடிகை.. லட்சங்களை இழந்த ஐடி வாலிபர்

காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது காதலன் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்க நபர்.. காப்பாற்றிய தமிழக சைபர் கிரைம் போலீசார்!

சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை தமிழக சைபர் கிரைம் போலீசார் காப்பாற்றியுள்ளனர்.

'நீங்கள் பாகிஸ்தான் உளவாளி'.. பெண்ணை மிரட்டி ரூ.22 லட்சம் மோசடி

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக மிரட்டி, பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை மும்பை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.160.8 கோடி சொத்து பறிமுதல்!

ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி வழக்கில் 800 கோடிக்கு மேல் மோசடி செய்தது தொடர்பாக 7 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், சுமார் ரூ.160.8 கோடி சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் வங்கியில் ரூ. 4.36 கோடி மோசடி: நிர்வாக இயக்குனர், மேலாளர் மீதுவழக்குப்பதிவு..!

பிரபல தனியார் வங்கியில், வைப்பு நிதியாக வைக்கப்பட்ட ரூ. 4.36 கோடி அமெரிக்க வாழ் இந்தியர்கள் பணத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் வங்கி மேலாளர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டை விற்று பணம் கொடுத்தேன்.. தயாரிப்பாளர் கண்ணீர்

நடிகர் மயில்சாமி மகனை வைத்து திரைப்படம் எடுத்து தருவதாக கூறி ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் மீது தயாரிப்பாளர் செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தொழிலதிபர்கள் தான் டார்கெட்.. பிரபல தனியார் வங்கி பெயரில் மோசடி

பிரபல தனியார் வங்கி பெயரில் நாடு முழுவதும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல், தென்னிந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3.61 லட்சம் மோசடி.. 2 பேர் கைது!

ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ. 3.61 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பணமோசடி வழக்கு...துபாயில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய கோடீஸ்வரர்

துபாயில் பணமோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

ஆசை வார்த்தைக்கூறி இளம்பெண்ணிடம் ஜிஎஸ்டி அலுவலக ஊழியர் மோசடி..!

இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட ஜிஎஸ்டி அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடரும் சைபர் கிரைம் மோசடி.. போலி ஆன்லைன் ரூ.90 லட்சம் திருடிய 2 பேர் கைது!

போலி ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மூலம் ரூ. 90 லட்சத்தை திருடிய 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மோசடி கும்பல் திருடிய பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றியது விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

அதிகரிக்கும் வங்கி மோசடி... 2 ஆண்டுகளில் 40 வழக்குகள்.. காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

2 ஆண்டுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 40 வழக்குகளில் 205 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மறுமணம் செய்வதாக முதியவரிடம் மோசடி- 2வது கணவரால் சிக்கிய ‘ரொமாண்டிக்’ பெண்

செய்திதாள்களில் மறுமணம் செய்ய விரும்பும் வயதான ஆண்கள் அளிக்கும் விளம்பரங்களை பார்த்து அவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடுவதாக கைதான கீதா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏழைகளுக்கு மருத்துவமனை கட்ட நினைத்த பெண் மருத்துவர்...ரூ.10 கோடி சொத்தை ஏமாற்றிய மோசடி கும்பல்

பல ஐஏஎஸ் அதிகாரிகளையும், கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களையும் தெரியும் எனக் கூறி உதவுவதாக ஆசை வார்த்தை காட்டியதாக தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு- தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன்  மோசடியாக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

குறைந்த விலையில் தங்க கட்டி: அதீத ஆசையால் 48 லட்சத்தை இழந்த நபர்!

குறைந்த விலையில் தங்க கட்டி கொடுப்பதாக கூறி மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் ₹48 லட்சம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கருப்பையா ( 23 ), கண்ணன் ( 22 ) ஆகிய இருவரை ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வனத்துறை காவலரிடம் 6.80 கோடி மோசடி... சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனத்துறை பாதுகாவலரிடம், சுமார் ரூ.6.8 கோடி சைபர் க்ரைம் மோசடி நடந்துள்ளது. ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணம் அனைத்தையும் ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் முதலீட்டில் இழந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

ஆன்லைன் மோசடி..! பணத்தை இழந்த நடிகர்! அழுவதா? சிரிப்பதா?

எவ்வளவு தான் நாம நெறய படிச்சி உலக அறிவோட இருக்கோம்னு நினச்சாலும், ஒருத்தன் ஆன்லைன் மோசடி பண்ணிட்டு போய்ட்டான் என வேதனை தெரிவித்து பிரபல சின்னத்திரை நடிகர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கமா? இல்லயா? என்பது விளக்கமளிக்க காவல்துறைக்கு உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்த காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

போலியான vahan-parivahan குறுஞ்செய்திகள்.. போக்குவரத்து அபராதம் செலுத்த லிங்க் அனுப்பி நூதன மோசடி..

போக்குவரத்து அபராதம் செலுத்த போலியான vahan-parivahan என்ற குறுஞ்செய்தி லிங்க் அனுப்பி மோசடி செய்யும் சைபர் கும்பல்.. சந்தேகப்படும் படியான இ-சலான்  லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தல்... இது என்ன வகையான மோசடி? விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்......

அறக்கட்டளை போர்வையில் மோசடி? சிக்கிய SCAM மன்னன்! சிக்கலில் காங்கிரஸ் பிரமுகர்?

பாதி விலைக்கு ஸ்கூட்டர், தையல் இயந்திரம், லேப்டாப் தருவதாக பொதுமக்களிடம் இருந்து பணத்தை திரட்டி 1000 கோடி ரூபாய் மோசடி செய்த நபரால் கேரளாவே ஆடிப்போயுள்ளது. இந்த மெகா SCAM நடந்தது எப்படி? மோசடிக்கு பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் யார் யார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

வயதான தம்பதிகளிடம் 10 லட்ச ரூபாய் எடுத்து மோசடி.. கல்லூரி மாணவி கைவரிசை..!

வயதான தம்பதியினரை கவனிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட கல்லூரி மாணவி, அவர்களிடம் இருந்து 10 லட்ச ரூபாயை எடுத்து மோசடி செய்துள்ளது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதி தரிசனத்திற்கு பத்தாயிரம் ரூபாயா..! பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல்

திருப்பதில் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பெண் மருத்துவரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். 

சித்தியை திருமணம் செய்ய அடம்பிடித்த இளைஞர்.. 12 பேரை காதலித்து ஏமாற்றியது அம்பலம்

திருவள்ளூர் அருகே மகன் உறவுமுறை இளைஞர் ஒருவர், சித்தியுடன் தான் திருமணம் செய்து கொண்டு வாழ்வேன் என காவல் நிலையத்தில் அடம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.