K U M U D A M   N E W S
Promotional Banner

மோசடி

கடன் பெற்று தருவதாக ரூ.23 லட்சம் மோசடி – நோட்டீஸ் வந்ததால் பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சி

தேனியில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதாகக் கூறி ஆதார், பான் கார்டு, செல்போன் ஒடிபி உள்ளிட்ட விவரங்களைப் பெற்று 23 லட்சம் ரூபாய் மோசடி

உள்ளாட்சி சாலைப் பணி நிதியில் ரூ.78 லட்சம் மோசடி: தனியார் நிறுவன ஊழியர் கைது!

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி – முன்னாள் அமைச்சரின் மகள், மருமகன் கைது

முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மருமகன் மற்றும் மகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்

வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி – பாஜக நிர்வாகி மீது வழக்கு

மதுரை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக பாஜக மகளிர் அணி மாவட்ட செயலாளர் மீது வழக்கு

சொத்தை மீட்டுத் தருவதாகக் கூறி மோசடி.. வங்கி இஎம்ஐ மூலம் போலீஸிடம் சிக்கிய மோசடி மன்னன்!

அரசு தொடர்பான வேலைகளையும், சொத்தையும் மீட்டுத் தருவதாகக் கூறி 62.8 லட்சம் மோசடி செய்த மோசடி மன்னன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணமோசடி வழக்கு: நடிகர் நிவின் பாலி விளக்கம்

தன் மீது பதியப்பட்டிருக்கும் மோசடி வழக்கு குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கமளித்துள்ளார்.

நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்குப்பதிவு – தயாரிப்பாளர் புகார்!

2022ல் வெளியான 'மஹாவீர்யார்' படத்தின் தயாரிப்பாளரின் புகாரில், நடிகர் நிவின் பாலி இயக்குநர் அப்ரித் ஷைன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலந்தூர் வங்கியில் நகை மோசடி: வாடிக்கையாளர்கள் முற்றுகை!

ஆலந்தூரில் உள்ள கத்தோலிக்க சிரியன் வங்கியில் வாடிக்கையாளர்களிடம் நகைகளை அதிக தொகைக்கு வைத்ததாகப் பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பாகத் தற்போது வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டுள்ளனர்.

18 இடங்களில் வருமானவரி சோதனை.. தமிழகத்தில் ₹550 கோடி வருமான வரி மோசடி!

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர் மிகப்பெரிய வருமான வரி மோசடி தொடர்பாக 18 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், சுமார் 550 கோடிவரை போலியாக வருமானவரி முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூ.40 கோடி மோசடி செய்த ஆந்திர இளைஞர்.. தூக்கிட்டு தற்கொலை!

புழல் பகுதியில் 40 கோடி மோசடியில் ஈடுபட்ட நபர் தான் சொந்தமாக வாங்கிய இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நிகிதா மீது சென்னையில் மோசடி புகார்...போலீஸ் விசாரணை

அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

OLA நிறுவனத்தில் வேலை.. ரூ.22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை வழங்கி 56 நபரிடம் ரூ. 22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம்.. ம.பி. காவலரின் நூதன மோசடி!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவலர் 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்ற நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.

"லக்கி பாஸ்கர்" படபாணியில் கொள்ளையடித்த வங்கி மேலாளர்.. வயதானவர்களின் வைப்பு நிதியை குறி வைத்து மோசடி!

லக்கி பாஸ்கர் படத்தில் யாரிடமும் சிக்காமல் கோடிக்கணக்கான ரூபாய் வங்கி பணத்தை மோசடி செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, வங்கி மேலாளர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயுடன் வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்தது போன்று, சென்னை அண்ணா நகரை சேர்ந்த இண்டஸ்இண்ட் வங்கி கிளை மேலாளர் லக்கி மஞ்சுளா கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீரவ் மோடி வங்கி மோசடி வழக்கு: சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது!

இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் தீபக் மோடி, தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதல் ஆசை காட்டிய துணை நடிகை.. லட்சங்களை இழந்த ஐடி வாலிபர்

காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது காதலன் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்க நபர்.. காப்பாற்றிய தமிழக சைபர் கிரைம் போலீசார்!

சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை தமிழக சைபர் கிரைம் போலீசார் காப்பாற்றியுள்ளனர்.

'நீங்கள் பாகிஸ்தான் உளவாளி'.. பெண்ணை மிரட்டி ரூ.22 லட்சம் மோசடி

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக மிரட்டி, பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை மும்பை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.160.8 கோடி சொத்து பறிமுதல்!

ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி வழக்கில் 800 கோடிக்கு மேல் மோசடி செய்தது தொடர்பாக 7 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், சுமார் ரூ.160.8 கோடி சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் வங்கியில் ரூ. 4.36 கோடி மோசடி: நிர்வாக இயக்குனர், மேலாளர் மீதுவழக்குப்பதிவு..!

பிரபல தனியார் வங்கியில், வைப்பு நிதியாக வைக்கப்பட்ட ரூ. 4.36 கோடி அமெரிக்க வாழ் இந்தியர்கள் பணத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் வங்கி மேலாளர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டை விற்று பணம் கொடுத்தேன்.. தயாரிப்பாளர் கண்ணீர்

நடிகர் மயில்சாமி மகனை வைத்து திரைப்படம் எடுத்து தருவதாக கூறி ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் மீது தயாரிப்பாளர் செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தொழிலதிபர்கள் தான் டார்கெட்.. பிரபல தனியார் வங்கி பெயரில் மோசடி

பிரபல தனியார் வங்கி பெயரில் நாடு முழுவதும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல், தென்னிந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3.61 லட்சம் மோசடி.. 2 பேர் கைது!

ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ. 3.61 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.