சினிமா

'ஜன நாயகன்' தான் விஜய்யின் கடைசி படமா? மமிதா பைஜூ சுவாரஸ்ய தகவல்

இதுதான் உங்களுக்கு கடைசி படமா? என்று விஜய்யிடம் கேட்டபோது, 'எனக்கு தெரியவில்லை' என அவர் பதிலளித்ததாக நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.

'ஜன நாயகன்' தான் விஜய்யின் கடைசி படமா? மமிதா பைஜூ சுவாரஸ்ய தகவல்
Vijay and Mamitha Baiju
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் 'ஜன நாயகன்'. KVN புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும். பாபி டியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும், நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் 'தளபதி வெற்றிக் கொண்டான் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் நேற்று (ஜூன் 22 ) ஆம் தேதி, தன்னுடைய 51-வது பிறந்த நாளை முன்னிட்டு, விஜயின் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட உள்ளதாக அறிவித்தது. அதன்படி சரியாக 12 மணிக்கு ( THE FIRST ROAR ) ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டது.

இந்த வீடியோ வெளியான 15 நிமிடங்களில் Youtube-ல் 1 மில்லியனுக்கும் மேலான ரியல் டைம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN PRODUCTION நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 'ஜன நாயகன்' விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய்யுடன் கலந்துரையாடியது குறித்து நடிகை மமிதா பைஜூ மனம் திறந்துள்ளார். "நான் விஜய் சாரிடம் கேட்டேன், 'இதுதான் உங்களுக்கு கடைசி படமா?' என்று. அதற்கு அவர், 'எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிவுகள் பொறுத்துதான் எல்லாம் முடிவு செய்யப்படும்' என்றார்" என மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் குறித்து பேசிய அவர், "விஜய் சார் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவார். மிகவும் கூலாக இருப்பார். 'ஜன நாயகன்' படப்பிடிப்பில் என்ன நடந்தாலும், அதை அவர் மிகவும் அமைதியாகக் கையாள்வார்" எனத் தெரிவித்தார்.

மமிதா பைஜூவின் பேச்சை அடுத்து ரசிகர்கள் 'விஜய் தொடர்ந்து படத்தில் நடிக்க வேண்டும்' என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.