ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பஞ்சாப் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி 18 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில், முதலில் ரோடு ஷோவிற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ய்யப்பட்டது.
பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக வரும் ஆர்.சி,பி அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி கிரிக்கெட் திடல் முன் திரண்டனர். அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.
அப்போது மக்கள் நாளாபுறமும் சிதறி ஓடியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சி திணறி பலர் மயக்கமடைந்தனர். அவர்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த நிலையில், தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பெங்களூருவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமை அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய கர்நாடக அரசு பிரார்த்தனை செய்கிறது எனவும் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக வரும் ஆர்.சி,பி அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி கிரிக்கெட் திடல் முன் திரண்டனர். அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.
அப்போது மக்கள் நாளாபுறமும் சிதறி ஓடியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சி திணறி பலர் மயக்கமடைந்தனர். அவர்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த நிலையில், தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பெங்களூருவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமை அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய கர்நாடக அரசு பிரார்த்தனை செய்கிறது எனவும் சித்தராமையா கூறியுள்ளார்.