குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு கடந்த 12 ஆம் தேதி மதியம் 1.38 மணியளவில் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விழுந்து வெடித்து சிதறி பெரும் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 69 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் காரர்கள், 7 போர்த்துகீசியர்கள், ஒரு கனேடியர், இரு பைலட்கள், 10 ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். இந்த கோர விபத்தில் ஒரு நபரை தவிர 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மேலும், விபத்தில் விஷவாஸ்குமார் ரமேஷ் என்ற பயணி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், விமான விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, முன்பதிவுகளில் தற்காலிக சரிவை ஏர் இந்தியா நிறுவன கண்டுள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கத்தின் (IATO) தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, " சர்வதேச முன்பதிவில் ஏறக்குறைய 18 சதவீதம் முதல் 22 சதவீதம் வரையும், உள்ளூர் பயணத்திற்கான புக்கிங் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையும் குறைந்துள்ளது. அதேபோல் உள்ளூர் பயணத்திற்கான டிக்கெட் கட்டணமும் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா தனது விமான டிக்கெட்களின் விலையைக் கணிசமாகக் குறைத்துள்ளது எனவும் தெரிவித்தார். "உள்நாட்டில், குறிப்பாக இண்டிகோ போன்ற குறைந்த கட்டண விமான நிறுவனங்களுடன் ஏர் இந்தியா போட்டியிடும் வழித்தடங்களில், டிக்கெட் விலைகள் 8-12 சதவீதம் குறைந்துள்ளன. சர்வதேச அளவில், குறிப்பாக ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்குச் செல்லும் கட்டணங்கள் 10-15 சதவீதம் சரிந்துள்ளன" என்று ரவி கோசைன் தெரிவித்தார்.
விமான விபத்துக்குப் பிறகு அடுத்த ஆறு நாட்களில் ஏர் இந்தியாவுக்கான விமான புக்கிங் 30-35 சதவீதம் வரை குறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் 69 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் காரர்கள், 7 போர்த்துகீசியர்கள், ஒரு கனேடியர், இரு பைலட்கள், 10 ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். இந்த கோர விபத்தில் ஒரு நபரை தவிர 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மேலும், விபத்தில் விஷவாஸ்குமார் ரமேஷ் என்ற பயணி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், விமான விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, முன்பதிவுகளில் தற்காலிக சரிவை ஏர் இந்தியா நிறுவன கண்டுள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கத்தின் (IATO) தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, " சர்வதேச முன்பதிவில் ஏறக்குறைய 18 சதவீதம் முதல் 22 சதவீதம் வரையும், உள்ளூர் பயணத்திற்கான புக்கிங் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையும் குறைந்துள்ளது. அதேபோல் உள்ளூர் பயணத்திற்கான டிக்கெட் கட்டணமும் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா தனது விமான டிக்கெட்களின் விலையைக் கணிசமாகக் குறைத்துள்ளது எனவும் தெரிவித்தார். "உள்நாட்டில், குறிப்பாக இண்டிகோ போன்ற குறைந்த கட்டண விமான நிறுவனங்களுடன் ஏர் இந்தியா போட்டியிடும் வழித்தடங்களில், டிக்கெட் விலைகள் 8-12 சதவீதம் குறைந்துள்ளன. சர்வதேச அளவில், குறிப்பாக ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்குச் செல்லும் கட்டணங்கள் 10-15 சதவீதம் சரிந்துள்ளன" என்று ரவி கோசைன் தெரிவித்தார்.
விமான விபத்துக்குப் பிறகு அடுத்த ஆறு நாட்களில் ஏர் இந்தியாவுக்கான விமான புக்கிங் 30-35 சதவீதம் வரை குறைந்ததாக கூறப்படுகிறது.