ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். ஈஃபிள் கோபுரத்தை விட உயரமான இந்த பாலம், இந்திய சிவில் இன்ஜினியரிங் துறையின் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
நாட்டின் உட்கட்டமைப்புகள் குறித்த பேச்சுகள் எழும்போதெல்லாம், ஜப்பானை பாருங்கள், சிங்கப்பூரை பாருங்கள் என்று கூறிய காலம் மாறி, தற்போது இந்தியாவை பாருங்கள் என்று கூறும் அளவுக்கு உருவாகியிருக்கிறது உலகின் மிக உயரமான ரயில் பாலம்.
காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் முயற்சியாக உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம் கால் நூற்றாண்டுகளுக்குப் பின் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 272 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த திட்டத்திற்கு கடந்த 1994ஆம் ஆண்டு பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து 2002 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு, பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. மலைப்பிரதேசத்தில் பெரும் சவால்களுடன் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தது. இந்த திட்டம் தொடங்கும் போது ரூபாய் 37 ஆயிரத்து 12 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரூபாய் 43 ஆயிரத்து 780 கோடி செலவில் அனைத்து பணிகளும் நிறைவுபெற்றுள்ளன.
ஒட்டுமொத்தமாக 272 கிலோமீட்டர் வழித்தடத்தில் 119 கிலோமீட்டர் தொலைவுக்கு 36 சுரங்கப் பாதைகளும், பள்ளத்தாக்கு மற்றும் மலை முகடுகளை இணைக்கும் வகையில் 943 பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.
161 கிலோ மீட்டர் தொலைவுள்ள வழித்தடம் பல்வேறு கட்டங்களாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இறுதியாக 111 கிலோ மீட்டர் தொலைவுள்ள கத்ரா - பனிஹால் வழித்தட பணிகள் நிறைவு பெற்றன. இந்த வழித்தடத்தில் தான் உலகிலேயே மிக உயரமான செனாப் ரயில் பாலம், இந்தியாவின் முதல் கேபிள் நிலை பாலம் மற்றும் பாலம் 220, பாலம் 224 ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே மிக நீளமான சுரங்க ரயில் பாதையும் இந்த வழித்தடத்தில் தான் உள்ளது.
இதில் குறிப்பாக காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான பாலம் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. ரூபாய் ஆயிரத்து 400 கோடி செலவில் கடப்பட்டுள்ள இந்த ரயில் பாலம் செனாப் நதிக்கரை மேல் இருந்து 359 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது உலக புகழ்பெற்ற பாரிஸின் ஈஃபிள் கோபுரத்தைவிட 35 மீட்டர் அதிகமாகும். ஆயிரத்து 315 மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
செனாப் ரயில் பாலத்தில் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். 8 ரிக்டர் அளவுகோல் வரையிலான பூகம்பத்தை தாங்கும் வகையில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள செனாப் பாலத்தின் கட்டுமாணப் பணிக்கு மைனஸ் 10 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையை தாங்கும் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 260 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் செனாப் பாலத்தை அசைக்க முடியாது என்றும் வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சாலை வசதி இல்லாத இடத்தில் பொருட்களை கொண்டு செல்ல முடியாத சிக்கலான புவியியல் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த செனாப் ரயில் பாலம் இந்திய பொறியியல் துறையின் மிக முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
நாட்டின் உட்கட்டமைப்புகள் குறித்த பேச்சுகள் எழும்போதெல்லாம், ஜப்பானை பாருங்கள், சிங்கப்பூரை பாருங்கள் என்று கூறிய காலம் மாறி, தற்போது இந்தியாவை பாருங்கள் என்று கூறும் அளவுக்கு உருவாகியிருக்கிறது உலகின் மிக உயரமான ரயில் பாலம்.
காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் முயற்சியாக உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம் கால் நூற்றாண்டுகளுக்குப் பின் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 272 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த திட்டத்திற்கு கடந்த 1994ஆம் ஆண்டு பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து 2002 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு, பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. மலைப்பிரதேசத்தில் பெரும் சவால்களுடன் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தது. இந்த திட்டம் தொடங்கும் போது ரூபாய் 37 ஆயிரத்து 12 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரூபாய் 43 ஆயிரத்து 780 கோடி செலவில் அனைத்து பணிகளும் நிறைவுபெற்றுள்ளன.
ஒட்டுமொத்தமாக 272 கிலோமீட்டர் வழித்தடத்தில் 119 கிலோமீட்டர் தொலைவுக்கு 36 சுரங்கப் பாதைகளும், பள்ளத்தாக்கு மற்றும் மலை முகடுகளை இணைக்கும் வகையில் 943 பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.
161 கிலோ மீட்டர் தொலைவுள்ள வழித்தடம் பல்வேறு கட்டங்களாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இறுதியாக 111 கிலோ மீட்டர் தொலைவுள்ள கத்ரா - பனிஹால் வழித்தட பணிகள் நிறைவு பெற்றன. இந்த வழித்தடத்தில் தான் உலகிலேயே மிக உயரமான செனாப் ரயில் பாலம், இந்தியாவின் முதல் கேபிள் நிலை பாலம் மற்றும் பாலம் 220, பாலம் 224 ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே மிக நீளமான சுரங்க ரயில் பாதையும் இந்த வழித்தடத்தில் தான் உள்ளது.
இதில் குறிப்பாக காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான பாலம் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. ரூபாய் ஆயிரத்து 400 கோடி செலவில் கடப்பட்டுள்ள இந்த ரயில் பாலம் செனாப் நதிக்கரை மேல் இருந்து 359 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது உலக புகழ்பெற்ற பாரிஸின் ஈஃபிள் கோபுரத்தைவிட 35 மீட்டர் அதிகமாகும். ஆயிரத்து 315 மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
செனாப் ரயில் பாலத்தில் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். 8 ரிக்டர் அளவுகோல் வரையிலான பூகம்பத்தை தாங்கும் வகையில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள செனாப் பாலத்தின் கட்டுமாணப் பணிக்கு மைனஸ் 10 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையை தாங்கும் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 260 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் செனாப் பாலத்தை அசைக்க முடியாது என்றும் வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சாலை வசதி இல்லாத இடத்தில் பொருட்களை கொண்டு செல்ல முடியாத சிக்கலான புவியியல் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த செனாப் ரயில் பாலம் இந்திய பொறியியல் துறையின் மிக முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.