இந்தியா

ஆந்திராவில் கோயில் லட்டுவில் ‘கரப்பான் பூச்சி’ என புகார்...பக்தர்கள் அதிர்ச்சி

பக்தர் அளித்த புகார் கடிதத்தில், ஊழியர்கள் அலட்சியமான லட்டுகள் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

ஆந்திராவில் கோயில் லட்டுவில் ‘கரப்பான் பூச்சி’ என புகார்...பக்தர்கள் அதிர்ச்சி
ஆந்திராவில் கோயிலில் வழங்கப்பட்ட லட்டுவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார்
ஆந்திரப் பிரதேசத்தில் பிரசித்தி பெற்றது ஸ்ரீசைலம் கோயில்.இந்த கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த இந்தநிலையில் கோயில் தேவஸ்தானம் ஞாயிற்றுக்கிழமை வழங்கிய லட்டு 'பிரசாதத்தில்' கரப்பான் பூச்சியைக் கண்டதாகக் கூறிய பக்தர், பரபரப்பை ஏற்படுத்தினார்.

லட்டுவில் கரப்பான் பூச்சி

சரஸ் சந்திரா என்ற அந்த நபர், லட்டின் நடுவில் இறந்த பூச்சி கிடப்பதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டார்.மேலும் அவர் உடனடியாக கோயில் நிர்வாக அதிகாரியிடம் புகார் செய்தார்.
புகார் கடிதத்தில், ஊழியர்களால் அலட்சியமாக லட்டுகள் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜூன் 29ம் தேதி நான் ஸ்ரீசைலம் தேவஸ்தானத்திற்குச் சென்றேன். லட்டு 'பிரசாதத்தில்' கரப்பான் பூச்சியைக் கண்டேன். தேவஸ்தான ஊழியர்கள் 'பிரசாதம்' தயாரிக்கும் போது அலட்சியமாக இருக்கிறார்கள். தயவுசெய்து ஒரு குறிப்பை எடுத்து பிரச்னையை தீர்த்து வைக்கவும் என்று அவர் கூறியுள்ளார்.

கோயில் நிர்வாகம் மறுப்பு

இருப்பினும், ஒரு கோயில் அதிகாரி, சரஸ் சந்திராவின் கூற்றை மறுத்துள்ளார். ஸ்ரீசைலம் தேவஸ்தான கோயிலின் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில், ஊழியர்கள் தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணியே லட்டுகளை தயாரிக்கிறார்கள்.

லட்டு தயாரிப்பு மையத்தில் உள்ள ஊழியர்களின் தொடர்ச்சியான மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்படுகிறது.அதில் கரப்பான் பூச்சி இருக்க வாய்ப்பில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், பக்தர்கள் 'பிரசாதம்' பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.