மணிப்பூரில் நடைப்பெற்ற கலவரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல ஆண்களுக்கு மத்தியில் நிர்வாணமாக ஒரு பெண் சாலைகளில் ஓடிய காட்சி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மணிப்பூரில் நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக மட்டும் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மார்ச் 21, 2022 அன்று இரண்டாவது முறையாக மணிப்பூர் முதலமைச்சராக என்.பிரேன் சிங் முதல்வராக பொறுப்பேற்றார்.
மணிப்பூரில் வெடித்த இன கலவரம்:
மணிப்பூரிலுள்ள மெய்தி சமூகத்தினர் தங்களுக்குப் பழங்குடி அந்தஸ்து கோரினர். பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் நில உரிமைப் பலன்களைப் பெறுவதற்கு பழங்குடி அந்தஸ்து உதவும் என்று மெய்தி சமூகத்தினர் தெரிவித்தனர். ஆனால், குகி மற்றும் நாகா சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஒருவேளை பழங்குடியினர் அந்தஸ்து வழங்கினால் அது மெய்தி சமூகத்தினரின் ஆதிக்கத்தை மாநிலத்தில் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சினர்.
ஆங்காங்கே நடைப்பெற்று வந்த சிறு மோதல்கள், மே 3, 2023 அன்று மெய்தி மற்றும் குகி-சோ சமூகங்களுக்கு இடையே பெரும் வன்முறை கலவரமாக வெடித்தது. இன மோதல்களை ஆளும் பாஜக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. இந்த இன கலவரத்தால், 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டதோடு, வழிபாட்டுத் தலங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பதவியை ராஜினாமா செய்த முதல்வர்:
பாஜக அரசு இன கலவரத்தை கையாண்ட விதம் கடும் விமர்சனங்களுக்குள்ளானது. குகி-சோ சமூகத்தைச் சேர்ந்த மொத்தம் 10 எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் பா.ஜ.க கூட்டணியை சேர்ந்தவர்கள். அவர்களே முதல்வர் பிரேன் சிங் வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டினர். எதிர்கட்சிகள் சட்டப்பேரவையில் முதல்வர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வர முடிவெடுத்தனர்.
நாலாப்புறமும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், வேறு வழியின்றி என். பிரேன் சிங் கடந்த பிப்ரவரி 9, 2025 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இன கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பிப்ரவரி 13, 2025 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.
44 எம்.எல்.ஏக்கள் தயார்:
தற்போதைய மணிப்பூர் சட்டமன்றத்தின் பதவிக்காலம் மார்ச் 13, 2027 அன்று முடிவடைகிறது. இன்னும் ஒரிரு ஆண்டுகள் உள்ளதால், புதிய அரசை அமைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தோக்சோம் ராதேஷ்யாம், ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து பேசியுள்ளார்.
சந்திப்புத் தொடர்பாக பத்திரிக்கையாளரிடம் பேசிய ராதேஷ்யாம், “மணிப்பூர் மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க 44 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர் என்பதை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்” என்றார். இதில், 30 பாஜக உறுப்பினர்கள், 6 NPP சட்டமன்ற உறுப்பினர்கள், 5 NPF சட்டமன்ற உறுப்பினர்கள் , 1 JD(U) எம்.எல்.ஏ மற்றும் 2 சுயட்சைகளும் அடங்குவர். குகி-சோ சமூகத்தைச் சேர்ந்த 7 பா.ஜ.க கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் எதிர் மனநிலையில் தான் உள்ளனர்.
மணிப்பூர் மாநில சபாநாயகர் சத்யபிரதா 44 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் சந்தித்து பேசியுள்ளார். டெல்லியிலுள்ள பாஜக தலைமை க்ரீன் சிக்னல் வழங்கும் பட்சத்தில் மீண்டும் மணிப்பூரில் புதிய அரசு அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மணிப்பூரில் நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக மட்டும் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மார்ச் 21, 2022 அன்று இரண்டாவது முறையாக மணிப்பூர் முதலமைச்சராக என்.பிரேன் சிங் முதல்வராக பொறுப்பேற்றார்.
மணிப்பூரில் வெடித்த இன கலவரம்:
மணிப்பூரிலுள்ள மெய்தி சமூகத்தினர் தங்களுக்குப் பழங்குடி அந்தஸ்து கோரினர். பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் நில உரிமைப் பலன்களைப் பெறுவதற்கு பழங்குடி அந்தஸ்து உதவும் என்று மெய்தி சமூகத்தினர் தெரிவித்தனர். ஆனால், குகி மற்றும் நாகா சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஒருவேளை பழங்குடியினர் அந்தஸ்து வழங்கினால் அது மெய்தி சமூகத்தினரின் ஆதிக்கத்தை மாநிலத்தில் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சினர்.
ஆங்காங்கே நடைப்பெற்று வந்த சிறு மோதல்கள், மே 3, 2023 அன்று மெய்தி மற்றும் குகி-சோ சமூகங்களுக்கு இடையே பெரும் வன்முறை கலவரமாக வெடித்தது. இன மோதல்களை ஆளும் பாஜக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. இந்த இன கலவரத்தால், 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டதோடு, வழிபாட்டுத் தலங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பதவியை ராஜினாமா செய்த முதல்வர்:
பாஜக அரசு இன கலவரத்தை கையாண்ட விதம் கடும் விமர்சனங்களுக்குள்ளானது. குகி-சோ சமூகத்தைச் சேர்ந்த மொத்தம் 10 எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் பா.ஜ.க கூட்டணியை சேர்ந்தவர்கள். அவர்களே முதல்வர் பிரேன் சிங் வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டினர். எதிர்கட்சிகள் சட்டப்பேரவையில் முதல்வர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வர முடிவெடுத்தனர்.
நாலாப்புறமும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், வேறு வழியின்றி என். பிரேன் சிங் கடந்த பிப்ரவரி 9, 2025 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இன கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பிப்ரவரி 13, 2025 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.
44 எம்.எல்.ஏக்கள் தயார்:
தற்போதைய மணிப்பூர் சட்டமன்றத்தின் பதவிக்காலம் மார்ச் 13, 2027 அன்று முடிவடைகிறது. இன்னும் ஒரிரு ஆண்டுகள் உள்ளதால், புதிய அரசை அமைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தோக்சோம் ராதேஷ்யாம், ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து பேசியுள்ளார்.
சந்திப்புத் தொடர்பாக பத்திரிக்கையாளரிடம் பேசிய ராதேஷ்யாம், “மணிப்பூர் மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க 44 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர் என்பதை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்” என்றார். இதில், 30 பாஜக உறுப்பினர்கள், 6 NPP சட்டமன்ற உறுப்பினர்கள், 5 NPF சட்டமன்ற உறுப்பினர்கள் , 1 JD(U) எம்.எல்.ஏ மற்றும் 2 சுயட்சைகளும் அடங்குவர். குகி-சோ சமூகத்தைச் சேர்ந்த 7 பா.ஜ.க கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் எதிர் மனநிலையில் தான் உள்ளனர்.
மணிப்பூர் மாநில சபாநாயகர் சத்யபிரதா 44 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் சந்தித்து பேசியுள்ளார். டெல்லியிலுள்ள பாஜக தலைமை க்ரீன் சிக்னல் வழங்கும் பட்சத்தில் மீண்டும் மணிப்பூரில் புதிய அரசு அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.