தமிழ்நாடு

மருத்துவ படிப்புகளுக்கான இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஜூன் 6) முதல் தொடங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவ படிப்புகளுக்கான இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இன்று ஜூன் 6 முதல் தொடங்கியுள்ளது. மாணவர்கள் www.tnmedicalselection.net என்ற அரசு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த விண்ணப்பம் 2025-2026 கல்வியாண்டிற்கான எம்.பி.பி.எஸ். (MBBS) மற்றும் பி.டி.எஸ். (BDS) பாடநெறிகளுக்காக நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை நிரப்ப இந்த முறை அவசியமாகும்.

கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
நடப்பு கல்வியாண்டுக்கான இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டு உள்ளது. கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை சீராக நடைபெற வலியுறுத்தப்பட்டு உள்ளது. தனியார் கல்லூரிகளில் கல்வி கட்டணம் தவிர விடுதி கட்டணம் போன்ற பிற கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு முடிவு வெளியான பின்னர் தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. எனவே, இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்து, மாணவர்களின் மேல்நிலைப்பள்ளி இறுதி தேர்வு முடிவு வெளியான பின்னர் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

நடப்பாண்டில், நாளை (6-ந் தேதி) முதல் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்த அமைச்சர், “மாணவர்களின் நேரம் மற்றும் சிரமத்தை குறைப்பதற்காக, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே இந்த முறையை தொடங்குகிறோம். இது மாணவர்களுக்கு பயன்படக்கூடிய ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் உள்ளதாக தெரிவித்தார்.