மதுரை, திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோயிலில் வரும் 14 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சேர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "குடமுழுக்கு விழாவுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான ஆலோசனைகளை கோயில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர் தலைமையில் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
பின்னர் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு, "திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தினோம். அதேபோல்தான் திருச்செந்தூரில் நடத்த முடிவெடுத்துள்ளோம். இன்னார் சொல்லித்தான் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதில்லை. நடைபெறப்போகும் ஒன்றை தாங்கள் ஆர்ப்பாட்டம் முற்றுகை என சொன்னபிறகு நடத்தப்படுவதாக கூறிக் கொள்கின்றனர். தானாக கனியும் கனியையும் தங்களது மந்திர சொற்களால் கனிந்ததாக சொல்லிக் கொள்கின்றனர்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ். இதுதான் திராவிட மாடல் ஆட்சி நாயகனுடைய கொள்கை. ஆகவே திருச்செந்தூரில் முருகப்பெருமானுடைய குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும்" என்றார்.
திமுக அரசு சார்பில் அனைத்து உலக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. ஆனால் நாங்கள் நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என இந்து அமைப்புகள் கேள்வி எழுப்பியது குறித்த கேள்விக்கு, "பழனி அனைத்துலக முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எந்த அரசியல் கட்சியையும் அழைக்கவிலை. எங்கும் அரசியல் வாடை இல்லை. 27 நாடுகளில் இருந்து முருக பக்தர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு உண்மையான முருக பக்தர்கள் வந்தார்கள். இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டிற்கு முதல்வர் சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு, அரசியல் ஆதாயத்துக்காகவும், அரசியல் லாப நோக்கத்தோடும் நடைபெறுகிறது. மதத்தால் மொழியால் இனத்தால் பிளவுபடுத்த தமிழக முதல்வர் அனுமதிக்கமாட்டார். அதன் முடிவு 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் திமுக கப்பலில் ஓட்டை விழுந்து விட்டது என பேசியது குறித்த கேள்விக்கு, "அவர்கள் கப்பலில் தான் ஓட்டை விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களது திராவிட மாடல் நாயகன் கப்பல் எப்போதும் ஓட்டை விழாது" என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
பின்னர் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு, "திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தினோம். அதேபோல்தான் திருச்செந்தூரில் நடத்த முடிவெடுத்துள்ளோம். இன்னார் சொல்லித்தான் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதில்லை. நடைபெறப்போகும் ஒன்றை தாங்கள் ஆர்ப்பாட்டம் முற்றுகை என சொன்னபிறகு நடத்தப்படுவதாக கூறிக் கொள்கின்றனர். தானாக கனியும் கனியையும் தங்களது மந்திர சொற்களால் கனிந்ததாக சொல்லிக் கொள்கின்றனர்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ். இதுதான் திராவிட மாடல் ஆட்சி நாயகனுடைய கொள்கை. ஆகவே திருச்செந்தூரில் முருகப்பெருமானுடைய குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும்" என்றார்.
திமுக அரசு சார்பில் அனைத்து உலக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. ஆனால் நாங்கள் நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என இந்து அமைப்புகள் கேள்வி எழுப்பியது குறித்த கேள்விக்கு, "பழனி அனைத்துலக முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எந்த அரசியல் கட்சியையும் அழைக்கவிலை. எங்கும் அரசியல் வாடை இல்லை. 27 நாடுகளில் இருந்து முருக பக்தர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு உண்மையான முருக பக்தர்கள் வந்தார்கள். இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டிற்கு முதல்வர் சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு, அரசியல் ஆதாயத்துக்காகவும், அரசியல் லாப நோக்கத்தோடும் நடைபெறுகிறது. மதத்தால் மொழியால் இனத்தால் பிளவுபடுத்த தமிழக முதல்வர் அனுமதிக்கமாட்டார். அதன் முடிவு 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் திமுக கப்பலில் ஓட்டை விழுந்து விட்டது என பேசியது குறித்த கேள்விக்கு, "அவர்கள் கப்பலில் தான் ஓட்டை விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களது திராவிட மாடல் நாயகன் கப்பல் எப்போதும் ஓட்டை விழாது" என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.