K U M U D A M   N E W S

இந்தியா

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவு.. 3 நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிப்பு!

கேரளா மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மாநிலத்தில் மூன்று நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக எம்.எல்.ஏ மகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!

முன்னாள் அமைச்சரும், அவுரத் தொகுதி பாஜக எம்எல்ஏ-வுமான பிரபு சவுகானின் மகன் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு.. திருப்பதியில் அவசரமாக தரையிறக்கம்

திருப்பதியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்ய திட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சர் - வைரல் வீடியோ வீடியோகுறித்து அமைச்சர் விளக்கம்!

மகாராஷ்டிரா சட்ட மேலவையில் ஆன்லைன் ரம்மி விளையாடியதாக வேளாண் துறை அமைச்சர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி கேம் பதிவிறக்கம் ஆனபோது சில வினாடிகளில் நீக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு ஏ.ஐ. உதவி வேண்டாம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியோடு நீதிமன்றங்களின் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது எனக் கேரள உயர் நீதிமன்ற நீதித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்தோருக்கு சிறப்பு வழிகாட்டுதலை கேரளா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை: குழந்தை கடத்தல் கும்பலுக்குச் செக்!

பஞ்சாப் மாநிலத்தின் தெருக்களில் யாசகம் பெறும் குழந்தைகளுக்கும் அவர்களுடன் உள்ள பெரியவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாசகம் செய்வோர் உண்மையிலேயே குழந்தையின் ரத்த உறவா என அறியவே சோதனையெனத் தகவல் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழப்பு!

பீகாரில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி மௌனத்தைக் கலைக்க வேண்டும்.. காங்கிரஸ் கடும் கேள்வி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24வது முறையாக ட்ரம்ப் கூறியதற்கு, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி நிச்சயமாகப் பதில் அளிக்க வேண்டும் என்ரும், இது தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

மோடி இல்லாவிட்டால் 150 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது -நிஷிகாந்த் தூபே

மோடி இல்லாவிட்டால் 150 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் தூபே தெரிவித்துள்ளார்.