K U M U D A M   N E W S

இந்தியா

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக லோக்சபாவில் கண்டனத் தீர்மானம்.. காங்கிரஸ் ஆதரவு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக லோக்சபாவில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்கள் கட்சி எம்.பி.க்கள் தீர்மானத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

BoB Recruitment: 2500 லோக்கல் வங்கி அதிகாரி காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாகவுள்ள 2500 லோக்கல் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைன் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு குறித்த சில முக்கிய விவரங்களை இப்பகுதியில் காணலாம்.

மருத்துவமனைக்குள் புகுந்த கேங்க்.. பரோலில் வெளிவந்த கைதி சுட்டுக்கொலை!

பாட்னாவில் மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதியை 5 நபர்கள் கொண்ட மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து: ஊகங்களைத் தவிர்க்குமாறு AAIB வேண்டுகோள்!

கடந்த மாதம் ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துகுறித்து, விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள்குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருவதை அடுத்து, AAIB இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

வயநாட்டில் அதி கனமழைக்கு ரெட் அலர்ட்.. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்!

கேரளா மாநிலம் வயநாட்டில் இன்று முதல் ஜூலை 20 வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

பீகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் இலவசம்- நிதிஷ்குமார் அதிரடி அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் இணைய மோசடி: ஒன்றரை ஆண்டில் ரூ. 107 கோடி இழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதிவான 1,301 இணைய மோசடி வழக்குகளில் ரூ.107 கோடி பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான ஆதார்: 5 வயசு ஆயிடுச்சா? இதை மறக்காம செஞ்சிடுங்க!

5 வயதுக்குள் ஆதார் பெற்ற குழந்தைகள், கைரேகை மற்றும் கருவிழிப் பதிவை புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயலிழக்கப்படும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

கைப்புள்ள தூங்கு.. நகைகளை திருடிவிட்டு கோயிலுக்குள் தூங்கிய திருடன்

ஜார்கண்டில் உள்ள ஒரு காளி கோயில் நகைகளை திருடிய இளைஞன், அங்கே அசந்து தூங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தை.. பெற்றோர் செய்த கொடூர செயல்

மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை, ஜன்னல் வழியே வீசிக் கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.