K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

Moderate Rain: தமிழகத்தில் செப்.9 வரை மிதமான மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா; குடியரசுத் தலைவர் முர்மு, ஆளுநர் ரவி பங்கேற்பு!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில்  45 மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிப் பாராட்டினார்.

நீதிமன்றமே முடிவெடுக்கும் என்றால் சட்டமன்றம், பாராளுமன்றம் எதற்கு? - சீமான் கேள்வி!

ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றத்தின் தலையீடு குறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாடாளுமன்றம், சட்டமன்றம் எதற்கு?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தையின் இறுதிச் சடங்கில் உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஜோதிடம்: எதிர்த்துப் போராடிய மாணவர்கள் கைது!

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஜோதிடத்தை சேர்ப்பதற்கான யுஜிசி அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற எஸ்.எஃப்.ஐ (SFI) அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம்: கட்சித் தொண்டர்களுக்கு கடிதம்!

முதலமைச்சர் ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தில் ரூ. 7,020 கோடி முதலீடுகளை ஈர்த்து, தனது பயணத்தை விமர்சித்தவர்களுக்குக் கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.

அயனாவரத்தில் அதிர்ச்சி: ரூ.500 தகராறில் நண்பரைக் கட்டையால் அடித்துக் கொலை.. ஒருவர் கைது!

₹500 கடன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நண்பரைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்த வழக்கில், அயனாவரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராசிபுரத்தில் பட்டப்பகலில் துணிகரம்.. மிளகாய் பொடி தூவி ரூ.50,000 திருட்டு!

ராசிபுரத்தில் லிஃப்ட் தருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற பெண், ஓய்வுபெற்ற செவிலியரிடம் மிளகாய் பொடி தூவி பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தெருநாய்கள் பிரச்னைக்கு தீர்வு ரொம்ப சிம்பிள்'- கமல்ஹாசன் சொன்ன பதில்!

தெரு நாய்கள் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "எல்லா உயிரினங்களையும் முடிந்த அளவுக்குக் காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

காவல்துறையினர் மீது தாக்குதல்: 29 வடமாநில தொழிலாளர்கள் சிறையில் அடைப்பு!

திருவள்ளூர் அருகே காவல்துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட 29 வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.