K U M U D A M   N E W S

தமிழ்நாடு

காவல்துறையினருக்கு டிஜிபி வெளியிட்ட முக்கிய உத்தரவு.. காரணம் என்ன?

சீருடையுடன் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டாம் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

முடிவுக்கு வரும் மீன்பிடி தடைகாலம்.. படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரி

மீன்பிடி தடைகாலம் நிறைவடைய உள்ள நிலையில், மீன்பிடி படகுகளை மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் இன்று ஆய்வு செய்தார்.

போலீசாரிடம் ஆபாசமாக பேசிய விசிக நிர்வாகிகள்.. வைரல் வீடியோ

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக பிரமுகர்.. போலீசார் வலைவீச்சு!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக வட்டச் செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

யானை வழித்தடத்தை பாதுகாக்க கோரிய வழக்கு.. அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை, வனக்கோட்ட பகுதிகளில் யானை வழித் தடங்களை பாதுகாக்க வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளுடன் வெங்காயம் நடவு செய்த கோவை கலெக்டர்!

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விவசாயிகளுடன் இணைந்து வெங்காயம் நடவு செய்தது அப்பகுதியில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

விவசாயி சடலத்தை பீகாருக்கு மாற்றி அனுப்பிய அரசு மருத்துவமனை- கொந்தளிப்பில் உறவினர்கள்

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அலட்சியத்தால் தமிழகத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் சடலம் பீகாருக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராடி வருகின்றனர்.

சிக்கன் குழம்பில் பல்லி.. உணவகத்தில் நாடகமாடிய 4 பேருக்கு போலீசார் வலை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கிவரும் உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நாடகமாடிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை - டி.ஆர். பாலு

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மக்களுக்கும் விளக்கும் வகையில், ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை என திமுக பொருளாளரும், மக்களவைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரியாணி சாப்பிடுவதில் சகோதரிகளிடையே தகராறு.. தங்கையின் விபரீத முடிவு!

பிரியாணி சாப்பிடுவதில் சகோதரிகள் இடையே ஏற்பட்ட தகராறில், தங்கை மொட்டை மாடியில் இருந்து குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.