முனிரத்னம் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சியில் பெண் ஊழியர்களிடம் பேரூராட்சி தலைவர் அத்துமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சிசிடிவி ஆதாரங்களுடன் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர் அளித்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், இரவு நேரத்தில், வீட்டிற்கு புறப்பட்ட பெண் ஊழியரின் கைப்பையை வலுக்கட்டாயமாக தலைவர் பறித்து வைத்து கொண்டு அலக்கழிக்கும் சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்ற நிலையில் அதை வைத்து கிண்டல் செய்த நபர் மீது ஐந்து பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான கூலி உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில், இதன் மூலம் 5 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுநீரக மோசடி மூலம் சட்டவிரோத பணப்பரிவர்தனையில் ஈடுபட்ட வழக்கில் மருத்துவர் வி.எம்.கணேசன் அவரின் மனைவி உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.