K U M U D A M   N E W S

தமிழ்நாடு

வட மாநில தொழிலாளர்கள் மின் கம்பத்தில் மோதி விபத்து.. காவல் துறையினர் விசாரணை

இருசக்கர வாகனத்தில் சென்ற வட மாநில தொழிலாளர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் - இஸ்ரோ தலைவர் நாராயணன்

விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் எனவும், இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து சந்திராயன்-5 வெண்கலம் அனுப்ப அனுமதி கிடைத்துள்ளதாகவும், ஆளில்லாத ரோபோட் வைத்து அனுப்ப திட்டமிட்டு உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

மாளியப்பட்டு தோசாலம்மன் திருவிழா..  மஞ்சு விரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

மாளியப்பட்டு தோசாலம்மன் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த ஓடிய காளைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

வனவிலங்குகள் உயிரிழப்பு.. கேபிள் மூலம் மின்சார வழங்கும் திட்டம் அறிமுகம்..!

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் தாக்கி வனவிலங்குகள் உயிரிழப்பதை தவிர்க்க, தொரப்பள்ளியில் இருந்து தெப்பக்காடு வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் மூலம் மின்சார வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு..!

ரயில் மூலம் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஈரோட்டில் பெண்கள் பாதுகாப்பு குழுவினர்  பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பட்ஜெட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் வரவேற்கத்தக்கது - பொன்குமார் பேட்டி

கட்டுமான தொழிலாளர்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்கதக்கது என்றும், மானியக்கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார்.

குடிசை வீடு.. அப்பாவுக்கு யானைக்கால் நோய்.. பள்ளி மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தஞ்சை MP

ஏழ்மை நிலையிலுள்ள பள்ளி மாணவிக்கு நேரில் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ததோடு, உயர்கல்விக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. ராஜேந்திர பாலாஜி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வேளாண் பட்ஜெட்.. 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

தமிழ சட்டப்பேரவையில் 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

போலீஸை கண்டதும் லஞ்சம் வாங்கிய பணத்தோடு குளத்தில் குதித்த விஏஓ.. அப்புறம் என்னாச்சு?

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய விஏஓ குளத்தில் குதித்து தப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.