K U M U D A M   N E W S

தமிழ்நாடு

மீண்டும்.. மீண்டுமா..? முதலமைச்சர் செல்லும் சாலையில் வெடிகுண்டு  வைப்போம் என மிரட்டல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் சாலைகளில் வெடிகுண்டு வைப்போம் என மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார் ஓட்டுநரின் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி.. முன்னாள் பாமக நிர்வாகி கைது

கார் ஓட்டுநரின் மனைவிக்கு  அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக  பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் மீது போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

சென்னை எழிலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நிலவும் தொடர் பனிமூட்டம்.. மக்கள் கடும் அவதி

கோடைக்காலம் தொடங்கிய நிலையிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

சீமானுக்கு திரள்நிதி கொழுப்பு! மைக்கை பார்த்தால் உளறுவார்... திரண்டு வந்த தவெக படை!

விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பை பணக்கொழுப்பு என விமர்சித்த சீமானை, தவெக நிர்வாகிகள் சுளுக்கெடுத்து வருகின்றனர். சீமானுக்கு திரள்நிதி கொழுப்பு என்றும், மைக்கை பார்த்தால் உளறுவது தான் அவரது வழக்கம் எனவும் அடுத்தடுத்து அட்டாக் செய்து வருகின்றனர். அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

“டேய் வெட்டி போட்டுருவேன்..” எகிறிய காங். பிரமுகர் மகன் போக்குவரத்து ஊழியர்கள் படுகாயம்!

காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன், அரசுப் பேருந்தில் செய்த ரகளையால், போக்குவரத்து ஊழியர்கள் 4பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்பதிவு செய்யாமல் அரசுப் பேருந்தில் ஏறி சீட் கேட்டது தான் இந்த ரணகளத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

’வெளிய சொன்னா கொன்னுடுவேன்’ மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்? பணத்தை இழந்த அப்பாவி பெண்

“நெஞ்சே நெஞ்சே நீ எங்கே” என அயன் பட சூர்யா ஸ்டைலில் ரீல்ஸ் போட்டு, திருமணமான பெண்ணுக்கு காதல் தூதுவிட்ட ரியல் எஸ்டேட் அதிபர், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

வரம்பு மீறிய வாத்தி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் கைதான ஆசிரியர்!

அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

Manju Virattu : தைப்பூசத்தை திருவிழாவை முன்னிட்டு சின்ன குன்றக்குடியில் மஞ்சுவிரட்டு..!

Manju Virattu in Chinna Kundrakudi : காரைக்குடி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 165 மாடுகளில் 13 மாடுகள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், மஞ்சு விரட்டு போட்டியில் 152 மாடுகள் மட்டுமே வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 

திருவண்ணாமலை: சிவாச்சாரியாரிடம் புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேட்டதால், கோயில் குருக்கள் தர்ணா..!

Tiruvannamalai Protest : அருணாசலேஸ்வரர் கோவிலின் தலைமை சிவாச்சாரியாரும் இளவரசு பட்டம் பெற்ற P.T.ரமேஷ் குருக்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.