நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் நியமனம்..!
நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநராக கோத்தகிரி அரசு பணிமனையில் சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்த சுகன்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநராக கோத்தகிரி அரசு பணிமனையில் சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்த சுகன்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
வாகன சோதனையின் போது, காவல்துறை மிரட்டிய நிலையில் அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத அடையார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வழக்குகளில், காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், ஜனவரி 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதகை அருகே உல்லத்தி பகுதியில் ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவேடன் பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
AI, CHAT GPT, இந்த இரண்டுமே டெக்னாலஜி உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. இவைகளுக்குப் போட்டியாக வெளியாகியுள்ள DEEPSEEK R1 என்ற ஆப், உலகையே மிரளவிட்டுள்ளது. முக்கியமாக டெக்னாலஜி உலகில் மன்னாதி மன்னனாக வலம் வரும் அமெரிக்காவை விழிபிதுங்க வைத்துள்ள இந்த DEEPSEEK R1, இந்தியாவுக்கும் தலை வலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
''நாட்டில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறுவது ஒவ்வொரு சம்பவத்திலும் நிரூபணம் ஆவதாக'' சமூக ஆர்வலர்கள் அச்சமும் அதிருப்தியும் தெரிவிப்பது சமூக ஆர்வலர் ஜகபர் அலி விஷயத்திலும் உறுதியாகி உள்ளது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, உயிர் பறிபோன பின்னர்தான் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமோ என்னும் கேள்வியை சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் கொலை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்களுடன் சில்மிஷத்தில் ஈடுப்பட்ட திவ்யா கள்ளச்சி சிக்கியது எப்படி? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்
காணும் பொங்கல் தினத்தில் பொது இடங்களில் கூடும் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆணவ இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மத்தைத் தவிர வேறில்லை. பாரதத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு தேசியத் தலைவர் நமக்கு இருக்கிறார் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.