K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

பயணி தள்ளிவிட்டத்தில் நடத்துநர் உயிரிழப்பு

எம்கேபி நகர்- கோயம்பேடு சென்ற பேருந்தில் மதுபோதையில் பயணித்த பயணி தகராறு

பாதுகாப்பு கேட்ட காதல்ஜோடி... பிரித்து அனுப்பிய காவல்துறை? காதலன் தற்கொலை..!

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் திருமண ஜோடியில், பெண்ணை பிரித்து பெற்றோருடன் அனுப்பியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜோடியைப் பிரித்து மணமகனின் உயிரைப் பறித்ததா காவல்துறை? செய்தித் தொகுப்பில் பார்ப்போம்...

பல்சர் பைக்கில் வந்து யாசகம்... Tax கட்டாத பணக்காரர்கள் இவர்கள்தான்!

‘பிச்சைக்காரன்’ பட பாணியில் ஹைடெக் ஆக பல்சர் பைக்கில் வலம் வந்து யாசகம் பெறும் நபர் ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் 2000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா? யார் அவர் என்பதைக் கீழே பார்க்கலாம்.

ரூ.200 செலுத்தினால் சாதி சான்றிதழ்? - போஸ்டரால் வெடித்த பிரளயம்

ஜிபே-வில் ரூ.200 செலுத்தினால் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும் என சாத்தான்குளம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை.. அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!

போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறது எனவும் மூன்று ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு 84 கோடியே 91 லட்சம் நிவாரணம் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் விற்பனை? - நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டுகள் மிரட்டல்... தமிழகத்தில் தொடரும் சம்பவம்!

ஏர் இந்தியாவின் சிங்கப்பூர் விமானம், இண்டிகோவின் ஜெய்ப்பூர் விமானம், ஆகாஷாவின் பெங்களூர் விமானம், ஆகிய விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்களுக்கு டார்க் நெட் எனப்படும் முகவரி இல்லாமல் வரும் இணையதள மிரட்டல் தகவல் வந்ததால், சென்னை விமான நிலையத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

ரயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல வேண்டாம்... பொதுமக்களுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்!

ரயில்களில் அல்லது ரயில்வே நிலையங்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று ரயில் பயணிகளுக்கு சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயார்... மக்கள் இனி ஜாலியாக சொந்த ஊர்களுக்கு செல்லலாம்!

“தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயாராக இருக்க சொல்லியுள்ளோம், விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகளை போக்குவரத்து கழகம் சார்பில் இயக்க உள்ளோம்” என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

”மன்னிப்பு கேட்டே ஆகணும்..” அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் மகன் அனுப்பிய நோட்டீஸ்

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு எதிராக அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் 10 கோடி ரூபாய் மனநஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.