K U M U D A M   N E W S

தமிழ்நாடு

4% வட்டியில் தங்க நகை கடன்.. தமிழக விவசாயிகள் எழுப்பும் கோரிக்கை

தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக திரும்பப் பெறவும் கோரிக்கை விடுத்துள்ளது.

தெய்வசெயல் மீதான புகார்.. ஆளுநரை காண ராஜ்பவன் வந்த இளம்பெண்ணால் பரபரப்பு

திமுக முன்னாள் நிர்வாகியான தெய்வசெயல் மீது அளித்த பாலியல் வன்கொடுமை புகாரை சிபிஐக்கு மாற்ற வேண்டி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முறையிடுவதற்காக உரிய அனுமதியின்றி ராஜ்பவன் சென்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

நெருங்கியது தென்மேற்கு பருவமழை- வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வங்கக் கடலில் வரும் 27 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்...3 பேரை பிடித்து விசாரணை

ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நடுக்கடலில் இலங்கை கடற்படை அத்துமீறல்...வலைகளை அறுத்தெரிந்ததால் மீனவர்கள் வேதனை

மீனவர்களின் வலைகள் மற்றும் எரிபொருளை இலங்கை கடற்படையினர் பறித்து சென்று அத்துமீறலில் ஈடுபட்டதாக கரைத்திரும்பிய நாகை மீனவர்கள் வேதனை

டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு...அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிப்பு

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு நடந்துள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரிசர்வ் வங்கி சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி உள்ளது- அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது…வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என அறிவிப்பு

நிதி ஆயோக் கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.

கோவையில் பாஜக நடத்திய தேசியக்கொடி பேரணி- அதிமுகவினர் பங்கேற்பு

ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

15,000 ரூபாய் கடன்.. குழந்தையை அடகு வைத்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆந்திர மாநிலத்தை சார்ந்த தம்பதியினர் தாங்கள் வாங்கிய 15,000 ரூபாய் கடனுக்காக பெற்ற குழந்தையினை அடகு வைத்த நிலையில், காஞ்சிபுரம் பாலாற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சத்குரு வழங்கும் தியானங்களால் இளமையாகும் மூளை- ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு

“சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு ஈஷா அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் தியான பயிற்சிகளினால் மூளையின் வயது 5.9 ஆண்டுகள் வரை இளமையாகிறது” என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஐ.பி.எல் சூதாட்டம்: ஒருவர் கைது - ரூ.96 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

கோவையில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ. 50 லட்சம் சொத்து, 46 லட்சம் வங்கி கணக்குகளை முடக்கி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆகாஷ் பாஸ்கரனுக்கு ED சம்மன்... ‘பராசக்தி’ படத்திற்கு சிக்கலா?

இன்று ஆஜராகும்படி ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஆகாஷ் பாஸ்கர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

சர்வதேச தேநீர் தினம்.. வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிக்கொடுத்த கடை உரிமையாளர்!

சர்வதேச தேநீர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் டீ மாஸ்டர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து கடைக்கு வந்த 50 நபர்களுக்கு இலவசமாக ஆவின் கடை உரிமையாளர் தேநீர் வழங்கியுள்ளார்.

மதுபோதையில் கார் ஓட்டிய தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அருகே கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு...ஒருவர் படுகாயம்

கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Gold Rate Today: மீண்டும் ஏறிய தங்கம் விலை

ஒரு கிராம் தங்கம் (இன்று ) ரூ.220 உயர்ந்து ரூ.8,930க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் - காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் ஐந்து வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்குமாறு காவல் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சேலம் அருகே மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து நகைகள் கொள்ளை...மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை

மூதாட்டியின் ஆடைகள் கலைந்த நிலையில் இருந்ததால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற்று கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

திமுக நிர்வாகி மீது கல்லூரி மீதான புகார்.. ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகம் விளக்கம்!

திமுக நிர்வாகி தெய்வசெயல் ஏமாற்றி திருமணம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் அளித்த வழக்கில், புகார் மீது காவல்துறை அலட்சியம் காட்டுவதாக கல்லூரி மாணவி குற்றச்சாட்டிய வழக்கில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இந்த வழக்கு தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆபீஸ் வரவங்க இதை கட்டாயம் செய்யணும்...தென்காசி கலெக்டர் அறிவிப்பு

மோட்டார் சைக்கிளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பு

பழைய குற்றால அருவி போறீங்களா? ஒரு நிமிஷம்.. வனத்துறையின் முக்கிய அறிவிப்பு

பிரபலமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க முடியாது என தென்காசி மாவட்ட வன அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கல்யாண ராணி விரித்த வலை.. மனைவி இல்லாத அரசு அதிகாரிகள் தான் டார்கெட்!

மடோனா என்கிற பெண்மணி, மனைவி இல்லாத ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை டார்கெட் செய்து அவர்களை திருமணம் செய்துக் கொண்டு சொத்துகளை அபகரிப்பதை தொடர் கதையாக மேற்கொண்டு வந்த நிலையில், போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.