K U M U D A M   N E W S
Promotional Banner

நான் தோனி பேசுகிறேன்.. ரஜத் படிதாரை கலாய்த்த சத்தீஸ்கர் இளைஞர்..பழைய மொபைல் எண்ணால் குழப்பம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தன்னுடை பழைய மொபைல் எண்ணால் இளைஞர் ஒருவரிடம் சிக்கிய நிலையில், அந்த எண்ணிற்கு விராட் ஏபிடி போன்ற பிரபலங்கள் ஆகியோர் அழைப்பு விடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கொடுத்த சிறப்புச் சலுகை.. அதிரடி தள்ளுபடியில் 50 லட்சம் டிக்கெட்டுகள்!

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 50 லட்சம் டிக்கெட்டுகளை சலுகை விலையில் விற்பனை செய்வதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி: ஏற்றுமதித் துறைக்குப் பெரும் பின்னடைவு!

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. Walmart, Amazon போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளதால், இந்தியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத் தொடராகிறது ‘ஏஜெண்ட் டீனா’

விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரத்தில் வசந்தி என்பவர் நடித்திருந்தார்

அதிகாரத் திமிர் தான் திமுக ஆட்சியின் கேடு- அன்புமணி

திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இளைஞர் மீது காரை ஏற்றி கொலை செய்த விவகாரம்: மேலும் ஒருவர் கைது

அண்ணா நகரில் காதல் விவகாரத்தில் இளைஞரை காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் அரசியல் பிரமுகரின் பேரன் உள்பட 3 பேர் கைது

மாணவர் நிதின் சாய் கொலை: கொலை செய்யும் எண்ணமில்லை.. திமுக பிரமுகர் சந்துரு வாக்குமூலம்!

சென்னையில் கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக பிரமுகரின் பேரன் போலீசில் சரணடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னாள் காதலியை வேவு பார்த்த வழக்கு: டிடெக்டிவ் ஏஜெண்ட் உட்பட 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்கத் திட்டம்!

ஓய்வுபெற்ற மாஜிஸ்திரேட்டின் மகளை டிடெக்டிவ் ஏஜெண்ட் வைத்து வேவு பார்த்த வழக்கில் கைதான முன்னாள் காதலன் உட்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை தவெக மாநாட்டு பணிகள் மும்முரம் - பணிகளை துரிதப்படுத்தும் ஆனந்த்

பனையூர் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையின் போது இந்த செயலியை வெளியிடுகிறார்.

மீண்டும் மீண்டும் காரை ஏற்றிய கொடூரன்…ஜம்மு காஷ்மீர் சம்பவத்தால் அதிர்ச்சி

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம்: அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கி, அதில் ஏ-320 ரக விமானங்களை இயக்கும் நோக்கில் புதிய ஓடுபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

கோவை குற்றாலம் மூடல்.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், அருவியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரம்!

சென்னையில் விதிமீறும் வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது முக்கிய சாலைகளில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இரண்டு மாத காலத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வர சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

சமூக ஊடகத்தால் அதிக குற்றச்சம்பவங்கள் நடக்கிறது – வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு போர்க்கால அடிப்படையில் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என வேல்முருகன் கோரிக்கை

சொகுசு கார்களைத் திருடிய எம்பிஏ பட்டதாரி.. சவால்விட்ட திருடனை கைது செய்த சென்னை போலீஸ்!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Rolls Royce சொகுசுகாரை திருடுவது போல, நாடு முழுவதும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான சாவி தயாரித்து சொகுசு காரர்களை திருடிய மெகா திருடனை சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை: குழந்தை கடத்தல் கும்பலுக்குச் செக்!

பஞ்சாப் மாநிலத்தின் தெருக்களில் யாசகம் பெறும் குழந்தைகளுக்கும் அவர்களுடன் உள்ள பெரியவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாசகம் செய்வோர் உண்மையிலேயே குழந்தையின் ரத்த உறவா என அறியவே சோதனையெனத் தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் திருமணப் பதிவுக்கு ஏற்பாடு.. தமிழக அரசு நடவடிக்கை!

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய, தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய வரும் 26ம் தேதி சனி அன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏர் இந்தியா விமான விபத்து: ஊகங்களைத் தவிர்க்குமாறு AAIB வேண்டுகோள்!

கடந்த மாதம் ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துகுறித்து, விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள்குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருவதை அடுத்து, AAIB இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்- அன்புமணி ராமதாஸ்

வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

விமானம் மீது மோதிய சரக்கு லாரி.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம் மீது சரக்கு லாரி மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏங்ங்க.. பிக்பாஸ் வீட்டில் களமிறக்கும் AI போட்டியாளர்?

பிக்பாஸ் சீசன் 19-ல் AI ரோபோ ஒன்று போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதியில் இனி லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

“எங்களை பொறுத்தவரை அமித்ஷா சொல்வது தான்” – டிடிவி தினகரன்

தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றிணைத்து அமித்ஷா செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டுமா.. டெல்லியில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு.. பயணிகள் அவதி!

டெல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தாமதமாகியது. வியட்நாமில் எரிபொருள் நிரப்ப விமானத்தை தரையிறக்கியபோது தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.