K U M U D A M   N E W S

மீண்டும் மீண்டும் காரை ஏற்றிய கொடூரன்…ஜம்மு காஷ்மீர் சம்பவத்தால் அதிர்ச்சி

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம்: அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கி, அதில் ஏ-320 ரக விமானங்களை இயக்கும் நோக்கில் புதிய ஓடுபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

கோவை குற்றாலம் மூடல்.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், அருவியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரம்!

சென்னையில் விதிமீறும் வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது முக்கிய சாலைகளில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இரண்டு மாத காலத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வர சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

சமூக ஊடகத்தால் அதிக குற்றச்சம்பவங்கள் நடக்கிறது – வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு போர்க்கால அடிப்படையில் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என வேல்முருகன் கோரிக்கை

சொகுசு கார்களைத் திருடிய எம்பிஏ பட்டதாரி.. சவால்விட்ட திருடனை கைது செய்த சென்னை போலீஸ்!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Rolls Royce சொகுசுகாரை திருடுவது போல, நாடு முழுவதும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான சாவி தயாரித்து சொகுசு காரர்களை திருடிய மெகா திருடனை சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை: குழந்தை கடத்தல் கும்பலுக்குச் செக்!

பஞ்சாப் மாநிலத்தின் தெருக்களில் யாசகம் பெறும் குழந்தைகளுக்கும் அவர்களுடன் உள்ள பெரியவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாசகம் செய்வோர் உண்மையிலேயே குழந்தையின் ரத்த உறவா என அறியவே சோதனையெனத் தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் திருமணப் பதிவுக்கு ஏற்பாடு.. தமிழக அரசு நடவடிக்கை!

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய, தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய வரும் 26ம் தேதி சனி அன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏர் இந்தியா விமான விபத்து: ஊகங்களைத் தவிர்க்குமாறு AAIB வேண்டுகோள்!

கடந்த மாதம் ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துகுறித்து, விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள்குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருவதை அடுத்து, AAIB இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்- அன்புமணி ராமதாஸ்

வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

விமானம் மீது மோதிய சரக்கு லாரி.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம் மீது சரக்கு லாரி மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏங்ங்க.. பிக்பாஸ் வீட்டில் களமிறக்கும் AI போட்டியாளர்?

பிக்பாஸ் சீசன் 19-ல் AI ரோபோ ஒன்று போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதியில் இனி லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

“எங்களை பொறுத்தவரை அமித்ஷா சொல்வது தான்” – டிடிவி தினகரன்

தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றிணைத்து அமித்ஷா செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டுமா.. டெல்லியில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு.. பயணிகள் அவதி!

டெல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தாமதமாகியது. வியட்நாமில் எரிபொருள் நிரப்ப விமானத்தை தரையிறக்கியபோது தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.

அருள் நீக்கம்: அன்புமணிக்கு அதிகாரம் இல்லை- ராமதாஸ்

பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது என ராமதாஸ் பேட்டி

பாமக எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்.. அன்புமணி அதிரடி முடிவு

பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

சித்ரகுப்த சுவாமி கோயில் தேங்காய் கடை ரூ.30 லட்சத்திற்கு ஏலம்!

சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலில் தேங்காய், பூ, மற்றும் பழம் விற்பணை செய்யும் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 21 லட்சத்திற்கு மேல் ஏலம் போன நிலையில், தற்போது, சுமார் 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் மாறி மாறி ஏலத்தாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டதால் அதிக விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டிராகன்' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா!

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அகமதாபாத் விமான விபத்து: ஐ.நா-வின் உதவியை நிராகரித்தது இந்தியா..!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஐ.நா. உதவ முன்வந்த நிலையில், இந்தியா அதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு.. விசாரணை தீவிரம்!

ஏர் இந்தியா விமானத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அவ்விமானத்தின், கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு நடக்கிறது - விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏடிஎம் மையங்களில் நூதனக் கொள்ளை.. வட மாநில இளைஞரின் புகைப்படம் வெளியீடு..!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் சினிமா பாணியில் ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வட மாநில ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. சம்பந்தப்பட்ட வட மாநில நபர் குறித்து பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

சோகத்தில் அதிமுக.. வால்பாறை எம்.எல்.ஏ. காலமானார்

வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

விமான விபத்து எதிரொலி.. ஏர் இந்தியாவின் முன்பதிவு சரிவு

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.