K U M U D A M   N E W S

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!

போக்குவரத்து துறையில் இளநிலை பொறியாளர்கள் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளிவைப்பு!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணாகிறது - நீதிபதி வேதனை

பொதுமக்களின் வழக்குகளுக்காக 7 சதவீத நேரத்தை மட்டுமே நீதிமன்றங்கள் செலவிடுவதாகக் குறிப்பிட்ட சென்னை நீதிமன்றம், நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளது.

முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு தண்டனை உறுதி!

கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய 13 பேரின் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தண்டனை பெற்றவர்களில் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.

துரத்தும் வழக்கு...நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.பி.,கதிர் ஆனந்த்

2019 தேர்தல் சமயத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

தமிழக அமைச்சரவையில் மாற்றம்.. பொன்முடி-செந்தில் பாலாஜி விடுவிப்பு

தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி சூளுரை

பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சூளுரைத்தார்.

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

மதுரையில் பிரசிதிப்பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. இதில், மீனாட்சியம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்? இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு!

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதால், நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட தண்டனைகள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கும் என்று செய்திகள் வெளிவருகின்றன.

ஓய்வூதியத்தை உயர்த்திய அரசு.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

முதலமைச்சர், சட்டமன்றம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வூதியம் உயர்வு,