K U M U D A M   N E W S

காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை...நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2014ம் ஆண்டு மிடாலம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளை எம்.எல்.ஏ தாக்கியதாக கூறப்படுகிறது.

பெரியார் பல்கலை துணைவேந்தர் வழக்கு.. ஜாமீன் ரத்துசெய்யக்கோரிய மனுவை தள்ளிவைத்த நீதிமன்றம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் - உயர்நீதிமன்றம்

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, அன்னை இல்லத்தின் உரிமையாளர் பிரபு தான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேள்வி கேட்டதால் ஆத்திரம்...முதியவரை அடித்து இழுத்து சென்ற மருத்துவர்...மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு

வீடியோவில் மருத்துவரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

உச்சநீதிமன்றம் குறித்து பாஜக எம்.பி-யின் சர்ச்சை பேச்சு: கடிவாளம் போட்ட ஜே.பி.நட்டா

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே விமர்ச்சித்த விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எம்பி நிஷிகாந்த் கருத்து பாஜகவின் கருத்தல்ல என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு...“இவங்களையும் சமமாக நடத்துங்க” –நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

சட்டமன்றத்தில் தீர்மான நாடகத்தை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கருணாநிதி மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றி மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கியுள்ளார்

ரூ.2000-க்கு மேல பணம் அனுப்புனா GST உண்டா..? மத்திய அரசு விளக்கம்

ரூ.2000-க்கு மேற்பட்ட ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற செய்திக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

வக்ஃபு திருத்த சட்டம் - உச்சநீதிமன்றத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

புதிய வக்ஃபு சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இன்று பிற்பகல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா.. வழக்கை முடித்து வைத்த சென்னை நீதிமன்றம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு....சிறப்பு நீதிமன்றம் போட்ட உத்தரவு

அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

கரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகளும், 4 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கு.. திரும்ப பெற்ற எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவின் கருப்பு, வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவை பயன்படுத்த டி.டி.வி தினகரனுக்கு தடை விதிக்க கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிச்சாமி திரும்ப பெற்றுக் கொண்டார். வழக்கு வாபஸ் பெற்றதை அடுத்து டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா.. ஆண்கள் மட்டும் செலுத்தும் நேர்த்திகடன்

மூன்று நாட்கள் செல்லியாண்டி அம்மன் கோயிலில் தங்கி விரதம் இருந்த ஆண் பக்தர்கள் மட்டுமே 60 அடி நீளம் உள்ள குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

தர்பூசணி பழத்தில் ரசாயனம் இல்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சீமானுக்கு எதிரான வழக்கு..வீடியோ ஆதாரங்களை பார்த்த பிறகு உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமானுக்கு எதிராக தொடரபட்ட வழக்கில், சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு கொட்டப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை!

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு வீசப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், தடயங்களை சேகரித்தனர்.

பாமகவை இழுக்கும் திமுக?.. தாமரையா? சூரியனா?.. சூடுபிடிக்கும் தைலாபுரம் மோதல்!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவை தனது கூட்டணிக்குள் இழுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஏற்கனவே எதிரும் புதிருமாய் இருக்கும் தைலாபுரம் தந்தை-மகன் கூட்டணிக்காக தாமரையை தேர்தெடுப்பார்களா? அல்லது சூரியனை தேர்தெடுப்பார்களா? பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

போக்சோ வழக்கு.. கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ED-க்கு நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சரின் தம்பி வழக்கு... ED-க்கு உயர்நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!

தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் கே. என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

துணைமுதல்வர் செல்வப்பெருந்தகை? போஸ்டரால் வந்த குழப்பம்..! ஷாக்கில் திமுக தலைமை..!

சென்னையில் ஆங்காங்கே தமிழக காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்காக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளாது. இந்த போஸ்டர் தான் இன்றைய தமிழ்நாடு அரசியல் களத்தின் ஹைலைட்டாக மாறியுள்ளது. அப்படி அந்த போஸ்டரில் இருந்தது என்ன? தமிழக காங்கிரஸ் போடும் தனி ரூட் என்ன? செல்வப்பெருந்தகை வைத்திருக்கும் விளக்கம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...