K U M U D A M   N E W S
Advertisement

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: மசோதா நிறைவேற்றப்படாததால் பெரும் பரபரப்பு!

புதிய நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அமெரிக்க அரசு நிர்வாகச் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நிபந்தனையை டிரம்ப் அரசு ஏற்காததால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து அரசுச் சேவைகளும் நிறுத்தப்படுகின்றன.

மன்னார்குடி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) முதல் தொடக்கம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) காலை 11 மணி முதல் தொடங்குகிறது என அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!

சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பூட்டான் இறக்குமதி கார் பறிமுதல்: கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு!

பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது காரைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததற்கு எதிராக, நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திருமண மோசடி புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக அவகாசம்?

திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

டெட் தேர்வு தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

டெட் (TET) தேர்வு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தென்காசியில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீசார் சம்மன்

வருகிற 26ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் மாதம்பட்டி ரங்கராஜு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பட்டுள்ளதாக தகவல்

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்த டெல்லி உயர் நீதிமன்றம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வீரா ராஜா வீரா பாடல் பதிப்புரிமை வழக்கில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதல்: கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிநபர் விவகாரத்தை எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யலாம்? - மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி!

கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.