போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீன் மற்றும் தொழிலதிபர் சரத் ஆகியோரைத் திருமங்கலம் போலீசார் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திரைத்துறையில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டது என்பது குறித்து முக்கியத் தகவல்களைச் சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை
போதைப்பொருள் விற்பனை மற்றும் சப்ளையில் ஈடுபட்டதாகத் திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோரைத் திருமங்கலம் போலீசார் கடந்த மாதம் 20-ஆம் தேதி கைது செய்தனர். அப்போது சர்புதீனின் காரில் இருந்து ரூ. 27.91 லட்சம் ரொக்கப் பணமும், சீனிவாசன் வீட்டில் இருந்து 10 கிராம் ஓ ஜி கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து திருமங்கலம் போலீசார் 3 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
திரையுலக தொடர்புகள் குறித்து விசாரணை
சர்புதீன் ஏற்கனவே நடிகர் சிம்புவிற்கு மேலாளராகப் பணியாற்றி உள்ளார். மேலும், இவர் பல நடிகர்கள், நடிகைகளுடன் பழக்கம் உடையவர். இந்த நிலையில், திருமங்கலம் போலீசார் சர்புதீன் மற்றும் தொழிலதிபர் சரத் ஆகியோரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், திரைத்துறையில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார் என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், எந்தெந்த பார்ட்டிகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது மற்றும் அதில் கலந்துகொண்ட திரை உலகினர் யார் யார் என்பது தொடர்பாக சர்புதீனிடம் விசாரணை நடத்தி ஒரு பட்டியலைத் தயாரித்து வருவதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை
போதைப்பொருள் விற்பனை மற்றும் சப்ளையில் ஈடுபட்டதாகத் திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோரைத் திருமங்கலம் போலீசார் கடந்த மாதம் 20-ஆம் தேதி கைது செய்தனர். அப்போது சர்புதீனின் காரில் இருந்து ரூ. 27.91 லட்சம் ரொக்கப் பணமும், சீனிவாசன் வீட்டில் இருந்து 10 கிராம் ஓ ஜி கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து திருமங்கலம் போலீசார் 3 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
திரையுலக தொடர்புகள் குறித்து விசாரணை
சர்புதீன் ஏற்கனவே நடிகர் சிம்புவிற்கு மேலாளராகப் பணியாற்றி உள்ளார். மேலும், இவர் பல நடிகர்கள், நடிகைகளுடன் பழக்கம் உடையவர். இந்த நிலையில், திருமங்கலம் போலீசார் சர்புதீன் மற்றும் தொழிலதிபர் சரத் ஆகியோரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், திரைத்துறையில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார் என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், எந்தெந்த பார்ட்டிகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது மற்றும் அதில் கலந்துகொண்ட திரை உலகினர் யார் யார் என்பது தொடர்பாக சர்புதீனிடம் விசாரணை நடத்தி ஒரு பட்டியலைத் தயாரித்து வருவதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
LIVE 24 X 7









