பொதுமக்கள் தாங்கள் சேமிக்கும் பணம், தங்கம் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வங்கிகளை தான் பெரும்பாலும் நம்பியுள்ளார்கள். ஆனால், அந்த வங்கிகளிலேயே கொள்ளை சம்பவம் நடைப்பெறுகிறது என்ற போது என்னத்த சொல்வது?
கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டம் பசவனபாகேவாடியில் அமைந்துள்ளது கனரா வங்கியின் கிளை. இந்த வங்கியில், 59 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் ரூ. 5.2 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை நிகழ்வு, மே மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக தெரிகிறது.
கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் தான் பீதர் மற்றும் மங்களூரில் இதேபோன்ற வங்கி தொடர்பான கொள்ளை சம்பவம் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது. தொடர் வங்கி கொள்ளை சம்பவம், கர்நாடகா மாநில காவல்துறைக்கு புதிய சவாலாக மாறியுள்ளது. வங்கி கொள்ளையில் நடைப்பெற்ற மிக முக்கியமான ட்விஸ்ட் என்னவென்றால், கொள்ளையடித்த நகை- பணம் இருந்த இடத்தில், 'மாந்திரீக' (Black Magic) வூடூ பொம்மை' ஒன்றை கொள்ளையர்கள் வைத்துவிட்டு சென்றுள்ளனர். இது வழக்கின் விசாரணையினை திசை திருப்பவா? இல்லை கொள்ளையர்கள் தங்களுக்கென ஒரு அடையாளத்தை காவல்துறையினர் மத்தியில் பதிய வைப்பதற்காக இவ்வாறு செய்துள்ளனரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய, 8 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகை மற்றும் பணம் கொள்ளைப் போன சம்பவத்தை அறிந்த வங்கி வாடிக்கையாளர்கள், வங்கியினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதி
அளித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து, விஜயபுரா காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மன் நிம்பர்கி கூறுகையில்,”முதலில் வங்கியில் திருட்டு நடந்துள்ளது என்பதனை துப்புரவு பணியாளர் தான் கண்டறிந்துள்ளர். வங்கியினை சுத்தம் செய்ய வந்தவர், ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மே 26 அன்று, மங்கோடியில் உள்ள கனரா வங்கியின் மேலாளர் புகார் அளித்துள்ளார்.
இந்த திருட்டு சம்பவத்தில் 6 முதல் 8 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வங்கியின் பிரதான நுழைவு வாயிலின் பூட்டை உடைத்துள்ள இந்த கும்பல், எச்சரிக்கை எழுப்பும் அலாரத்தினை முடக்கி செயலிழக்க வைத்துள்ளனர். பின் போலி சாவியினை பயன்படுத்தி ஒரு லாக்கரை திறந்து பணம் மற்றும் நகையினை கொள்ளையடித்துள்ளனர். குற்றவாளிகள் வங்கியின் உட்கட்டமைப்பு போன்றவற்றை முன்னரே நன்கு தெரிந்து வைத்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆராய்ந்து வருகிறோம்.விசாரணையினை திசை திருப்புவதற்காக மாந்தீரிக பொம்மை ஒன்றினை வைத்துவிட்டு சென்றுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
திருட்டு நடந்த சம்பவத்தில், வங்கியில் சுமார் ரூ.53 கோடி மதிப்புள்ள தங்கமும், ரூ.7 லட்சம் ரொக்கமும் இருந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹெர்னல் மற்றும் ஹூப்பள்ளி போன்ற பகுதிகளை சார்ந்த தங்கத்தை அடகு வைத்து நகைக்கடன் பெற்றுள்ளனர்.
சமீபத்தில், பீதர் பகுதியில் ஏடிஎம்-மில் பணம் நிரப்புவதற்காக இரண்டு பாதுகாவலர்களுடன் வங்கி வாகனம் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள், இரண்டு பாதுகாவலர்களையும் கொன்று, வாகனத்தில் இருந்த 93 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டம் பசவனபாகேவாடியில் அமைந்துள்ளது கனரா வங்கியின் கிளை. இந்த வங்கியில், 59 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் ரூ. 5.2 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை நிகழ்வு, மே மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக தெரிகிறது.
கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் தான் பீதர் மற்றும் மங்களூரில் இதேபோன்ற வங்கி தொடர்பான கொள்ளை சம்பவம் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது. தொடர் வங்கி கொள்ளை சம்பவம், கர்நாடகா மாநில காவல்துறைக்கு புதிய சவாலாக மாறியுள்ளது. வங்கி கொள்ளையில் நடைப்பெற்ற மிக முக்கியமான ட்விஸ்ட் என்னவென்றால், கொள்ளையடித்த நகை- பணம் இருந்த இடத்தில், 'மாந்திரீக' (Black Magic) வூடூ பொம்மை' ஒன்றை கொள்ளையர்கள் வைத்துவிட்டு சென்றுள்ளனர். இது வழக்கின் விசாரணையினை திசை திருப்பவா? இல்லை கொள்ளையர்கள் தங்களுக்கென ஒரு அடையாளத்தை காவல்துறையினர் மத்தியில் பதிய வைப்பதற்காக இவ்வாறு செய்துள்ளனரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய, 8 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகை மற்றும் பணம் கொள்ளைப் போன சம்பவத்தை அறிந்த வங்கி வாடிக்கையாளர்கள், வங்கியினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதி
அளித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து, விஜயபுரா காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மன் நிம்பர்கி கூறுகையில்,”முதலில் வங்கியில் திருட்டு நடந்துள்ளது என்பதனை துப்புரவு பணியாளர் தான் கண்டறிந்துள்ளர். வங்கியினை சுத்தம் செய்ய வந்தவர், ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மே 26 அன்று, மங்கோடியில் உள்ள கனரா வங்கியின் மேலாளர் புகார் அளித்துள்ளார்.
இந்த திருட்டு சம்பவத்தில் 6 முதல் 8 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வங்கியின் பிரதான நுழைவு வாயிலின் பூட்டை உடைத்துள்ள இந்த கும்பல், எச்சரிக்கை எழுப்பும் அலாரத்தினை முடக்கி செயலிழக்க வைத்துள்ளனர். பின் போலி சாவியினை பயன்படுத்தி ஒரு லாக்கரை திறந்து பணம் மற்றும் நகையினை கொள்ளையடித்துள்ளனர். குற்றவாளிகள் வங்கியின் உட்கட்டமைப்பு போன்றவற்றை முன்னரே நன்கு தெரிந்து வைத்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆராய்ந்து வருகிறோம்.விசாரணையினை திசை திருப்புவதற்காக மாந்தீரிக பொம்மை ஒன்றினை வைத்துவிட்டு சென்றுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
திருட்டு நடந்த சம்பவத்தில், வங்கியில் சுமார் ரூ.53 கோடி மதிப்புள்ள தங்கமும், ரூ.7 லட்சம் ரொக்கமும் இருந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹெர்னல் மற்றும் ஹூப்பள்ளி போன்ற பகுதிகளை சார்ந்த தங்கத்தை அடகு வைத்து நகைக்கடன் பெற்றுள்ளனர்.
சமீபத்தில், பீதர் பகுதியில் ஏடிஎம்-மில் பணம் நிரப்புவதற்காக இரண்டு பாதுகாவலர்களுடன் வங்கி வாகனம் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள், இரண்டு பாதுகாவலர்களையும் கொன்று, வாகனத்தில் இருந்த 93 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.