இந்தியா

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவா? புன்னப்புழா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!

வயநாட்டில் பெய்த கனமழையால் முண்டகை பகுதியில் நிலச்சரிவு, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவா?  புன்னப்புழா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!
வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவா? புன்னப்புழா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முண்டகை பகுதியில் நிலச்சரிவுகள் மீண்டும், மீண்டும் ஏற்படுவதால் அப்பகுதியில் மீட்பு பணிகள் சவாலாக மாறியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட முண்டக்கை பகுதியில் ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. நிலச்சரிவால் அங்குள்ள பாலம் இழுத்துச் செல்லப்பட்டது. அதை தொடர்ந்து அப்பகுதி மக்களின் போக்குவரத்துக்காக டெய்லி பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் பரவலாக பெய்து வரும் மழையையொட்டி, வயநாட்டிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

முண்டகையில் நேற்று இரவு முதல் அப்பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. புன்னப்புழா நதி வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த நிலையில் தற்போது திடீரென மண் கலந்த நீர் பாய்ந்து வருகிறது இதனால் மலைப்பகுதியில் எங்கேனும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.

அந்தப் பகுதியில் யாரும் வசிக்கவில்லை என்பதாலும், மேலும், சுற்றுவட்டார குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முண்டகை-அட்டமலை சாலை முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது. முண்டகை வனப்பகுதியில் 100 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக அறிகுறிகள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு படையினரும் காவல்துறையினரும் அப்பகுதிக்குத் திரும்பியுள்ளனர்.

தேயிலை தோட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கும்ருமட்டம் மற்றும் முண்டகை ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். நேற்று மாலை முதல் வயநாட்டில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வயநாட்டின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்ப்படுகிறது