ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகிய இருவருக்கிடையேயான திருமணம் கடந்த மே 11 ஆம் தேதி நடைப்பெற்றது. இந்த ஜோடி தேனிலவிற்காக மேகாலயா சென்ற நிலையில் ராஜா ரகுவன்ஷி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி குறித்த தகவல் தற்போது வரை கிடைக்கவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளாரா? கொலை செய்யப்பட்டுள்ளாரா? இல்லை வேறு ஏதேனும் நடந்துள்ளதா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுமணத் தம்பதியினர், மத்தியப் பிரதேசத்தின் இந்தூரிலிருந்து மே 20 ஆம் தேதி கிளம்பி மே 22 ஆம் தேதி மவ்லகைட் கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர். ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் தம்பதியினர் நோங்ரியாட்டில் உள்ள ஒரு தங்குமிடத்திலிருந்து கிளம்பி, வழிகாட்டி துணை இல்லாமல் மவ்லகைட் கிராமத்தினை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அதன்பின் இவர்கள் காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கினர் காவல்துறையினர். தம்பதியினரை தேடும் பணியில், அவர்களது மொபைல் போன்கள் கடைசியாக மவ்லகைட் பகுதியில் ஆக்டிவாக இருந்துள்ளது கண்டறியப்பட்டது. வாடகை ஸ்கூட்டர் ஒன்றினை எடுத்துக்கொண்டு மவ்லகைட் கிராமத்தை சுற்றிப்பார்க்க சென்ற அந்த தம்பதியினர், சோஹ்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட நோங்ரியாத் கிராமத்தில் உள்ள பிரபலமான வேர்ப் பாலங்களைப் (Root bridges) பார்வையிட பள்ளத்தாக்கில் 3000-க்கும் மேற்பட்ட படிகள் நடந்து டிரெக்கிங் சென்றுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட கணவர்:
மே 24 அன்று, ஷில்லாங்கிலிருந்து சோஹ்ரா செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர்களின் ஸ்கூட்டர் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. புதுமணத் தம்பதியினரை அணுக அவர்களது குடும்பத்தினர் முயற்சித்த போது, எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதன் பின்னர் தான் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் உள்ளூர் கிராமவாசிகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை திட்டமிடப்பட்டது. ஆனால், பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், மே 27 ஆம் தேதி, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மேகாலாய முதல்வர் கான்ராட் சங்மாவிடம் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து ட்ரோன்கள், மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் பணி வேகமெடுத்தது.
மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தின் சோஹ்ரா பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஜூன் 2 ஆம் தேதி, ராஜா ரகுவன்ஷி சடலமாக மீட்கப்பட்டார். அவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இரத்தக்கறை படிந்த ஆயுதத்தையும் போலீசார் மீட்டனர். இவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஒரு மழைக்கோட்டும் கண்டெடுக்கப்பட்டது.
மனைவியே தேடும் பணியில் சுணக்கம்:
ராஜா ரகுவன்ஷி உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி சோனம் குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை. இதுக்குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி நிலவரப்படி, சோனம் ரகுவன்ஷியியை தேடும் பணியானது கனமழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணத்தினால் சுணக்கம் அடைந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கோரி புதுமணத்தம்பதியினரின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். புதுமணத் தம்பதியினர் மேகாலயவிற்கு ஹனிமூன் சென்ற நிலையில், கணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மேகாலயா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுமணத் தம்பதியினர், மத்தியப் பிரதேசத்தின் இந்தூரிலிருந்து மே 20 ஆம் தேதி கிளம்பி மே 22 ஆம் தேதி மவ்லகைட் கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர். ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் தம்பதியினர் நோங்ரியாட்டில் உள்ள ஒரு தங்குமிடத்திலிருந்து கிளம்பி, வழிகாட்டி துணை இல்லாமல் மவ்லகைட் கிராமத்தினை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அதன்பின் இவர்கள் காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கினர் காவல்துறையினர். தம்பதியினரை தேடும் பணியில், அவர்களது மொபைல் போன்கள் கடைசியாக மவ்லகைட் பகுதியில் ஆக்டிவாக இருந்துள்ளது கண்டறியப்பட்டது. வாடகை ஸ்கூட்டர் ஒன்றினை எடுத்துக்கொண்டு மவ்லகைட் கிராமத்தை சுற்றிப்பார்க்க சென்ற அந்த தம்பதியினர், சோஹ்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட நோங்ரியாத் கிராமத்தில் உள்ள பிரபலமான வேர்ப் பாலங்களைப் (Root bridges) பார்வையிட பள்ளத்தாக்கில் 3000-க்கும் மேற்பட்ட படிகள் நடந்து டிரெக்கிங் சென்றுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட கணவர்:
மே 24 அன்று, ஷில்லாங்கிலிருந்து சோஹ்ரா செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர்களின் ஸ்கூட்டர் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. புதுமணத் தம்பதியினரை அணுக அவர்களது குடும்பத்தினர் முயற்சித்த போது, எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதன் பின்னர் தான் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் உள்ளூர் கிராமவாசிகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை திட்டமிடப்பட்டது. ஆனால், பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், மே 27 ஆம் தேதி, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மேகாலாய முதல்வர் கான்ராட் சங்மாவிடம் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து ட்ரோன்கள், மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் பணி வேகமெடுத்தது.
மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தின் சோஹ்ரா பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஜூன் 2 ஆம் தேதி, ராஜா ரகுவன்ஷி சடலமாக மீட்கப்பட்டார். அவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இரத்தக்கறை படிந்த ஆயுதத்தையும் போலீசார் மீட்டனர். இவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஒரு மழைக்கோட்டும் கண்டெடுக்கப்பட்டது.
மனைவியே தேடும் பணியில் சுணக்கம்:
ராஜா ரகுவன்ஷி உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி சோனம் குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை. இதுக்குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி நிலவரப்படி, சோனம் ரகுவன்ஷியியை தேடும் பணியானது கனமழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணத்தினால் சுணக்கம் அடைந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கோரி புதுமணத்தம்பதியினரின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். புதுமணத் தம்பதியினர் மேகாலயவிற்கு ஹனிமூன் சென்ற நிலையில், கணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மேகாலயா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.